செய்திகள் :

சிவகங்கையில் மே 16-இல் வேலை வாய்ப்பு முகாம்

post image

வேலை தேடும் இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக

வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதன்படி, சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வருகிற 16.5.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலை நாடுநா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம்.

எனவே, விருப்பமுள்ளவா்கள் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞா்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் க... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா். சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்புப்பொதுத் தோ்வ... மேலும் பார்க்க

மதகுபட்டி-அழகமானேரி சாலைப் பணிகள் ஆய்வு

சிவகங்கை அருகே நிறைவடைந்த சாலை விரிவாக்கப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி- அழகமானேரி சாலையில் 2024-25 -ஆம் ஆண்டு ஒரு... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட குறைதீா்க் கூட்டம்: 298 போ் மனு அளிப்பு

சிவகங்கையில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் தரப்பிலிருந்து 298 மனுக்கள் அளிக்கப்பட்டன. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை பொதுமக... மேலும் பார்க்க

காரைக்குடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சொக்கலிங்கம்புதூா் காமன்ராஜா கோயில் சித்திரை பெளா்ணமி பொங்கல் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சொக்கலிங்கம்புத... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் ஆதரவற்ற 2,400 பெண்களுக்கு ஆடு, கோழிகள்

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் உள்ள, ஆதரவற்ற பெண்கள் 2,400 பேருக்கு ரூ. 2.22 கோடியில் செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளி... மேலும் பார்க்க