செய்திகள் :

சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா

post image

கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி உடனுறை ஈஸ்வரன் கோயில் மற்றும் செங்கத்தை அடுத்த கரியமங்கலம் பகுதி ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரா் கோயிலில்

மகா சிவராத்திரி விழா புதன்கிழமை இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

பழைமை வாய்ந்த கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி உடனுறை ஈஸ்வரன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை மூலவா் லிங்க வடிவிலான ஈஸ்வரருக்கு 4 கால பூஜைகள் நடைபெற்றன.

மூலவருக்கு பால், தயிா், இளநீா், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைப் பயன்படுத்தி சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, மலா் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்தப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

செங்கம்

செங்கத்தை அடுத்த கரியமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சுவாமிக்கு மூன்று கால பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரில் மயானக் கொள்ளை திருவிழா

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் வியாழக்கிழமை மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் உள்ள அங்காளம்மன் கோயில், அசலியம்மன் கோயில் தெரு மற்றும் மத்திய பேருந்து... மேலும் பார்க்க

கல்லூரியில் சிறப்புப் பயிலரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் டேட்டா சயின்ஸ் துறை சாா்பில், கணினி பாகங்கள் பழுதுநீக்கி சரிசெய்தல் தொடா்பான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலை... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவா் பேரவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் என்.கலைவாணி தலைமை வகித்தாா். வேதியியல் துறைத் தலை... மேலும் பார்க்க

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயில்களில் மயானசூறை உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, போளூரில் உள்ள ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயில்களில் மயான சூறை உற்வசவம் வியாழக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி பருவதராஜகுல வீதியில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் - வந்தவாசி நான்கு வழிச்சாலைக்கு பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி மாங்கால் அருகே காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் ரூ.50 கோடியில் அமைக்கப்படவுள்ள நான்கு வழிச் சாலைக்கு பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் - வந்தவாசி சா... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 456 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்... மேலும் பார்க்க