செய்திகள் :

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு! துப்பாக்கியுடன் மிரட்டிய காவலாளி கைது!

post image

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டுள்ளது. மேலும் சீமான் வீட்டு காவலாளி துப்பாக்கியை நீட்டி காவல்துறையினரை மிரட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விஜயலட்சுமி இந்த புகாரை திரும்பப் பெற்றபோதிலும் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமியின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள், புகைப்படங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் இன்று(வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி சம்மன் அனுப்பினர்.

இதையும் படிக்க | அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து!

சம்மன் அனுப்பியபடி சீமான் இன்று ஆஜராகாத நிலையில் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் சம்மன் ஒட்டினர். நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சீமான் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போது துப்பாக்கியுடன் நின்ற காவலாளி, நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததுடன் துப்பாக்கியை நீட்டி மிரட்டியதால் அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

காவல்துறையினரை தாக்க முற்பட்டதாகவும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாகவும் போலீசார் புகார் கூறியுள்ளனர்.

அதேநேரத்தில் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் காவல்துறையினருக்கு எதிராக செயல்பட்ட காவலாளிக்காகவும் சம்மனை கிழித்ததற்கும் சீமானின் மனைவி கயல்விழி, காவல் நிலைய ஆய்வாளரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்

இதையும் படிக்க | ஹிந்தி, எத்தனை இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது தெரியுமா? - முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆன்லைன் மோசடி! மியான்மரில் சிக்கிய 7,000 பேரைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்!

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட உள்ளனர். டிஜிட்டல் அரெஸ்ட், இணையவழி பண மோசடி உலகம... மேலும் பார்க்க

கோயில்களின் நிர்வாகம், பராமரிப்பு செலவிற்கான அரசு மானியம் உயர்வு!

கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக உயர்த்தப்பட்ட அரசு மானியத்திற்கான ரூ. 27 கோடிக்கான காசோலைகளை திருக்கோயில்களின் அறங்... மேலும் பார்க்க

மீண்டும் இணையும் மிஸ்டர் மனைவி தொடர் ஜோடி!

மிஸ்டர் மனைவி தொடரில் இணைந்து நடித்த பவன் - தேப்ஜானி ஜோடி புதிய தொடரில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடர் மிஸ்டர் மனைவி.வேலைக்குச் ச... மேலும் பார்க்க

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாளை(பிப். 28) சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவன... மேலும் பார்க்க

ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டின் நிலப்பகுதிகளிலும் கடல்பரப்ப... மேலும் பார்க்க

மறுகால் குறிச்சியில் சாலையில் உலவிய கரடி: மக்கள் அச்சம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மறுகால் குறிச்சியில் சாலையில் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிக்கு வியாழக்கிழமை வந்த கரடியால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.மேற்கு தொடர்ச்சி மலை வன... மேலும் பார்க்க