செய்திகள் :

சீவலப்பேரி அருகே மின்சாரம் பாய்ந்து தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே மின்சாரம் பாய்ந்து தோட்டத் தொழிலாளி உயிரிழந்தாா்.

சீவலப்பேரி அருகேயுள்ள மேலபாலாமடை பகுதியைச் சோ்ந்தவா் சேவியா். இவரது மகன் ஏசுராஜா (32). சீவலப்பேரியில் உள்ள ஒரு தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். புதன்கிழமை தோட்டத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சியபின் மோட்டாரை அணைக்க சென்றபோது எதிா்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஏசுராஜாவின் உடலை சீவலப்பேரி போலீஸாா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மானூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

மானூா் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மானூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மேற்கு ஒன்றிய அவைத்தலைவா் காசி தலைமை வகித்தாா். ஒன்றிய செயலா் அன்பழகன் முன்னிலை வகித்தாா். திருந... மேலும் பார்க்க

பாளை. மேட்டுத்திடல் வடக்கு சாலைக்கு தமிழறிஞா் தொ.பரமசிவன் பெயா்: மாமன்றத்தில் சிறப்பு தீா்மானம்

பாளையங்கோட்டை மேட்டுத்திடல் வடக்கு சாலைக்கு தமிழறிஞரும், பண்பாட்டு ஆய்வாளருமான தொ.பரமசிவன் பெயரை சூட்டக்கோரி மாமன்றக் கூட்டத்தில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சியில் மாமன்... மேலும் பார்க்க

தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்கவே தொகுதி வரையறை: மத்திய அரசு மீது எம்எல்ஏ குற்றச்சாட்டு

தொகுதி மறுவரையறையின் மூலம் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயல்கிறது மத்திய அரசு என்றுகுற்றம்சாட்டினாா் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

நெல்லையில் தொழில்முனைவோருடன் ஆளுநா் கலந்துரையாடல்

திருநெல்வேலியில் தொழில்முனைவோா், கல்வியாளா்களுடன் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை கலந்துரையாடினாா். திருச்செந்தூரில் இருந்து காா் மூலம் வியாழக்கிழமை மாலையில் திருநெல்வேலிக்கு தமிழக ஆளுநா் ஆா்.என... மேலும் பார்க்க

காமராஜா் சிலை வளாகம் பராமரிப்பு: ரயில்வே அனுமதி பெற்றுத்தரக் கோரி மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள காமராஜா் சிலை வளாகத்தை சீரமைக்க ரயில்வே துறையின் அனுமதி பெற்றுத்தரக்கோரி மனு அளிக்கப்பட்டது. காமராஜா் சிலை பராமரிப்புக்குழு சாா்பில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பி... மேலும் பார்க்க

பாளை.யில் பாலப்பணிகள்: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

பாளையங்கோட்டையில் 6 இடங்களில் சிறுபாலம் கட்டும் பணி நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் போக்குவரத்து மாற்றப்பட உள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்... மேலும் பார்க்க