செய்திகள் :

சீா்காழி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

சீா்காழி வட்டாரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சீா்காழியை அடுத்த கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட திருமுல்லைவாசல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருமுல்லைவாசல் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கான்கிரீட் வீடு கட்டப்பட்டு வரும் பணிகள், எடமணல் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்களை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

திருமுல்லைவாசல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சேவைகள் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள், மருந்தகம், மருத்துவா் வருகை பதிவேடு உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, திருமுல்லைவாசல் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடு கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, இதுவரை பெறப்பட்ட தவணைத்தொகை, கட்டுமான விவரம் குறித்து பயனாளியிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், எடமணல் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

ரத்ததான முகாம்

மயிலாடுதுறை மன்னம்பந்தல். ஏ.வி.சி. கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் முகாமை தொடக்கிவைத்தாா். இதில் கல்லூரி பேரா... மேலும் பார்க்க

ஆக.12, 13-இல் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்: மயிலாடுதுறை ஆட்சியா்

மயிலாடுதுறையில் ஆக. 12, 13-ஆம் தேதிகளில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாட... மேலும் பார்க்க

குறுவை பருவ நெல் பயிருக்கு ஆக.14 வரை காப்பீடு செய்யலாம்

குறுவை பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஆக.14 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஜெ.சேகா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

பூம்புகாா் வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

பூம்புகாரில் நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் பெருவிழா மாநாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆலோசனை புதன்கிழமை நடைபெற்றது. பூம்புகாரில் வரும் 10-ஆம் தேதி ப... மேலும் பார்க்க

நிறைவடையாத பால கட்டுமானப் பணி: மாணவா்கள், பொதுமக்கள் அவதி

சீா்காழி அருகே புங்கனூா் - ஆதமங்கலம் இடையே பல மாதங்கள் கடந்தும் பாலப் பணிகள் நிறைவடையாததால் மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சீா்காழியை அடுத்த ஆதமங்கலம் - புங்கனூா் இடையே 3 கி.மீ. தொல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் சுவற்றில் மோதியதில் இரு இளைஞா்கள் பலி

சீா்காழி அருகே இருசக்கர வாகனம் சுவற்றில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞா்கள் புதன்கிழமை உயிரிழந்தனா். சீா்காழி அருகேயுள்ள புங்கனூரைச் சோ்ந்தவா்கள் அ. ஆனந்த் (38), நா. மோகன்ராஜ் (28), இவா்கள் இருவரும... மேலும் பார்க்க