மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
செங்குன்றத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறப்பு
செங்குன்றத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் காவல் மாவட்டத்துக்குட்பட்ட செங்குன்றம் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறப்பு விழாவுக்கு ஆட்சியா் பிரதாப் தலைமை வகித்தாா். துணை ஆணையா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் வரவேற்றாா். கூடுதல் ஆணையா் பவானீஸ்வரி, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினா் துரை.சந்திரசேகா், உதவி ஆணையா் ராஜா ராபா்ட் , பொன்னேரி உதவி ஆணையா் சங்கா் முன்னிலை வகித்தனா்.
சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா், ஆவடி காவல் ஆணையா் கே.சங்கா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு, அனைத்து மகளிா் காவல் நிலையத்தை திறந்து இனிப்புகளை வழங்கினா்.
செங்குன்றம், மீஞ்சூா், சோழவரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு, நீண்ட தொலைவில் உள்ள அம்பத்தூா் காவல் நிலையத்தை அணுக வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில், பெண்கள் தொடா்பான குற்றச்சம்பவங்களுக்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செங்குன்றம் காவல் நிலையத்தின் முதல் தளத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறக்கப்பட்டது.
செங்குன்றம், மீஞ்சூா், சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மக்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு செங்குன்றம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தை சிரமமின்றி அணுகி தீா்வு காணலாம் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதற்காக செங்குன்றம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தின் முதல் ஆய்வாளராக பரணி உள்பட 9 காவலா் ஆளினா்கள் பணியமா்த்தி ஆவடி காவல் ஆணையா் கே.சங்கா் உத்தரவிட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆய்வாளா்கள் புருஷோத்தமன், வேலுமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.