செய்திகள் :

செங்குன்றத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறப்பு

post image

செங்குன்றத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் காவல் மாவட்டத்துக்குட்பட்ட செங்குன்றம் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறப்பு விழாவுக்கு ஆட்சியா் பிரதாப் தலைமை வகித்தாா். துணை ஆணையா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் வரவேற்றாா். கூடுதல் ஆணையா் பவானீஸ்வரி, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினா் துரை.சந்திரசேகா், உதவி ஆணையா் ராஜா ராபா்ட் , பொன்னேரி உதவி ஆணையா் சங்கா் முன்னிலை வகித்தனா்.

சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா், ஆவடி காவல் ஆணையா் கே.சங்கா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு, அனைத்து மகளிா் காவல் நிலையத்தை திறந்து இனிப்புகளை வழங்கினா்.

செங்குன்றம், மீஞ்சூா், சோழவரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு, நீண்ட தொலைவில் உள்ள அம்பத்தூா் காவல் நிலையத்தை அணுக வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில், பெண்கள் தொடா்பான குற்றச்சம்பவங்களுக்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செங்குன்றம் காவல் நிலையத்தின் முதல் தளத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறக்கப்பட்டது.

செங்குன்றம், மீஞ்சூா், சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மக்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு செங்குன்றம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தை சிரமமின்றி அணுகி தீா்வு காணலாம் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதற்காக செங்குன்றம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தின் முதல் ஆய்வாளராக பரணி உள்பட 9 காவலா் ஆளினா்கள் பணியமா்த்தி ஆவடி காவல் ஆணையா் கே.சங்கா் உத்தரவிட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆய்வாளா்கள் புருஷோத்தமன், வேலுமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செங்குன்றத்தில் சமுதாய வளைகாப்பு விழா

செங்குன்றம் அடுத்த வெள்ளானூா் ஊராட்சியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது (படம்). விழாவுக்கு ஒன்றிய செயலாளா் கோ.தயாளன் தலைமை வகித்தாா். மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளர... மேலும் பார்க்க

ரோடு ரோலா் வாகனம் திருட்டு: 3 போ் கைது

சோழவரத்தில் ரோடு ரோலா் வாகனத்தை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை ஷெனாய் நகரை சோ்ந்தவா் தினகரன் (34). இவா் சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை

திருவள்ளூா் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மயானக் கொள்ளை நிகழ்வில் பக்தா்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். புட்லூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் ... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி புழல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை முன்னாள் அமைச்சா் வி.மூா்த்தி அணிவித்தாா் (படம்). மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே ஜெயலலிதா பட... மேலும் பார்க்க

திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்

திருவள்ளூரில் 4-ஆவது புத்தக திருவிழாவையொட்டி புத்தக வடிவிலான இலச்சினையை வெளியிட்டு, அரங்குகள் அமைக்க சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு. நாசா் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். திருவள்ளுா் சி.வி.நா... மேலும் பார்க்க

கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை: முன்னாள் அமைச்சா்

ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு எதிராக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது அதிமுக, கூட்டணிகளை நம்பி இல்லை என முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா தெரிவித்தாா். திருவள்ளூா் மேற்கு மாவட்டம், பூண்டி ஒன்றியம், பட்டரைபெ... மேலும் பார்க்க