செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே! டீ ரூ.10, சமோசா, வடை ரூ. 20!

post image

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலிவு விலை கஃபேவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்துவைத்தார்.

நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் உணவகங்களை திறக்க வேண்டுமென்றால் அதிகளவிலான வாடகைத் தொகை செலுத்த வேண்டும்.

இதனால், விமான நிலையங்களில் தண்ணீர் முதல் உணவு வரை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. முதல்முறையாக விமானத்தில் செல்பவர் என்றால் உணவு வகையில் விலைப்பட்டியலை பார்த்து மயங்கிவிடுவார்கள்.

தண்ணீர் பாட்டல் ரூ. 125, இட்லி ரூ. 250, பிரியாணி ரூ. 450 என தலைசுற்றும் அளவு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, விமானத்துக்குள் 100 மி.லி. மட்டுமே தண்ணீர் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதையும் படிக்க : தோனியின் ’மோர்ஸ் கோட்’ டீ-சர்ட்! அப்படியென்றால் என்ன?

இந்த நிலையில், பயணிகளுக்கு குறைந்த விலை டீ, காபி, தண்ணீர் மற்றும் திண்பண்டங்களை விற்பனை செய்யும் ’உடான் யாத்ரி கஃபே’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

கொல்கத்தா விமான நிலையத்தில் முதல் கஃபே திறக்கப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்திலும் இன்று திறக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நடத்தும் இந்த கஃபேவில் தண்ணீர் ரூ. 10, டீ ரூ. 10, காபி ரூ. 20, சமோசா, வடை உள்ளிட்டவை ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தால் விமான பயணிகள் பலரும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி ஆஜர்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்கு கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சங்கர் ஆஜரானார்.நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக... மேலும் பார்க்க

கன்னியாகுமரி உள்பட 10 மாவட்டங்களில் நாளை கனமழை!

தமிழகத்தில் நாளை (பிப். 28)ல் பத்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்.28 (நாளை) கடலோர தமிழகத்தில் அநேக இடங்க... மேலும் பார்க்க

நான் தலைமறைவாக இல்லை; காவல்துறைக்கு ஏன் இவ்வளவு அவசரம்? - சீமான் பேட்டி

நான் தலைமறைவாக இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஓசூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'நான் எங்கும் தலைமறைவாக இல்லை. நான் பயந்து எங்கும் ஓடிவிட மாட்டேன். நான்... மேலும் பார்க்க

சிவராத்திரி: கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட 92 வயது மூதாட்டி!

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தொடர்ந்து 63வது ஆண்டாக முத்தம்மாள்(92)என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு, பக்தர்களுக்க... மேலும் பார்க்க

சென்னையில் கழிப்பறைகளைப் பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம்! - உறுப்பினர்கள் எதிர்ப்பு!

சென்னையில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்... மேலும் பார்க்க

ஹிந்தி, எத்தனை இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது தெரியுமா? - முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஹிந்தி எத்தனையோ இந்திய மொழிகளை விழுங்கி இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இ... மேலும் பார்க்க