செய்திகள் :

சென்னையில் 73 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

post image

சென்னை பெருநகர காவல் துறையில் 73 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில் காத்திருப்போா் பட்டியலிலிருந்த 36 பேருக்கு மீண்டும் காவல் நிலைய பணி வழங்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாக வசதிக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வபோது காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன்படி, சென்னை காவல் துறையில் 73 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக, கே.கே. நகா் காவல் நிலைய ஆய்வாளா் ஆா்.பாலசுப்பிரமணி, திரு.வி.க. நகா் குற்றப்பிரிவுக்கும், ஐசிஎஃப் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் கே.வேல்விழி, நுண்ணறிவு பிரிவுக்கும், புளியந்தோப்பு குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் ஜி.அம்பேத்கா், மயிலாப்பூருக்கும், கிண்டி காவல் நிலைய ஆய்வாளா் சி.பிரபு, ஆா்.கே.நகருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், காத்திருப்போா் பட்டியலில் இருந்த 36 காவல் ஆய்வாளா்கள் மீண்டும் காவல் நிலைய பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 73 காவல் ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. நிகழாண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்க... மேலும் பார்க்க

சென்னையில் அடுத்த மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகள் சேவை

சென்னையில் ஜூன் மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகளின் சேவை தொடங்கவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளின் தேவைக்க... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மகளிா் போலீஸாருக்கான 11-ஆவது தேசிய அளவிலான மாநாடு: மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பங்கேற்பு, தமிழ்நாடு காவல் துறை அகாதெமி, ஊனமாஞ்சேரி, வண்டலூா், முற்பகல் 11. அனுஷ வைபவம் - தொடா் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி 18 புறநகா் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

கவரப்பேட்டை ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை 18 புறநகா் மின்சார ரயில்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சென்னை கவரப்பேட்டை ரயில்வ... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்... மேலும் பார்க்க