செய்திகள் :

சென்னையில் கழிப்பறைகளைப் பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம்! - உறுப்பினர்கள் எதிர்ப்பு!

post image

சென்னையில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.

ஏற்கெனவே சென்னையில் 372 இடங்களில் உள்ள 3,270 கழிப்பறை இருக்கைகளை பராமரிக்க தனியாரிடம் ரூ. 430 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ராயபுரத்தில் 2,159 கழிப்பறைகள், திருவிக நகரில் 958 கழிப்பறைகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கழிப்பறை இருக்கைக்கு ரூ. 364 செலவு என்ற வகையில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ரூ. 1,200 கோடி செலவில் சென்னையில் அனைத்து கழிப்பறைகளையும் பராமரிக்கும் பொறுப்பை தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி பராமரித்தால் இவ்வளவு செலவு இருக்காது, இதற்காக ஒதுக்கும் நிதி அதிகமாக இருக்கிறது என்று கூட்டத்தில் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | ஹிந்தி, எத்தனை இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது தெரியுமா? - முதல்வர் மு.க. ஸ்டாலின்

மேலும், வணிக வளாகக் கடைகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வணிக வளாகக் கடைகளுக்கான மாத வாடகையை ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் 12% அபராதம் விதிக்கப்படும்.

வணிக வளாகக் கட்டடங்களின் குத்தகை காலம் 9 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 15% வாடகை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இனி ஆண்டுக்கு 5% மட்டுமே உயர்த்தப்படும்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 127 வணிக வளாகங்களில் உள்ள 5,914 கடைகளுக்கும் மாதம் ரூ. 180 கோடி வசூல் செய்யப்படுகிறது.

பெருநகர சென்னையின் கடன்தொகை ரூ. 3,065.65 கோடி: மேயர் பிரியா

பெருநகர சென்னையின் கடனுக்காக வட்டி மட்டும் ரூ. 8.5 கோடி செலுத்தப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்தார்.சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி ஆஜர்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்கு கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சங்கர் ஆஜரானார்.நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக... மேலும் பார்க்க

கன்னியாகுமரி உள்பட 10 மாவட்டங்களில் நாளை கனமழை!

தமிழகத்தில் நாளை (பிப். 28)ல் பத்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்.28 (நாளை) கடலோர தமிழகத்தில் அநேக இடங்க... மேலும் பார்க்க

நான் தலைமறைவாக இல்லை; காவல்துறைக்கு ஏன் இவ்வளவு அவசரம்? - சீமான் பேட்டி

நான் தலைமறைவாக இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஓசூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'நான் எங்கும் தலைமறைவாக இல்லை. நான் பயந்து எங்கும் ஓடிவிட மாட்டேன். நான்... மேலும் பார்க்க

சிவராத்திரி: கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட 92 வயது மூதாட்டி!

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தொடர்ந்து 63வது ஆண்டாக முத்தம்மாள்(92)என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு, பக்தர்களுக்க... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே! டீ ரூ.10, சமோசா, வடை ரூ. 20!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலிவு விலை கஃபேவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்துவைத்தார்.நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் உணவகங்களை திறக்க வேண்டும... மேலும் பார்க்க