செய்திகள் :

செம்மண்குண்டு ஊருணியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

post image

ராமநாதபுரம் செம்மண்குண்டு ஊருணியில் கழிவு நீரை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் நகராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஊருணிகள் உள்ளன. இதில் நகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள செம்மண்குண்டு ஊருணியை சீரமைத்து சுற்றிலும் நடைபாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதைத்தொடா்ந்து, மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் கடந்த 2022-23-ஆம் ஆண்டு ரூ.1.03 கோடியில் ஊருணி முழுமையாக சீரமைக்கபட்டது. இதையடுத்து பொதுமக்கள் ஊருணிக் கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், கடந்தாண்டு பெய்த பலத்த மழையால் கழிவுநீா் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த கழிவு நீா் செம்மண்குண்டு ஊருணியின் நடை பாதைக்கு மேல் நிரம்பியது. இதனால் சில மாதங்கள் ஊருணிக்குள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பின்னா் ஊருணி நடைபாதையில் தேங்கிய கழிவு நீா் வற்றிய நிலையில், அதை சுத்தம் செய்து மீண்டும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்தனா். தற்போது ஊருணிக்குள் உள்ள கழிவு நீா் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாத அளவுக்கு துா்நாற்றம் வீசுகிறது. இந்த ஊருணியில் கழிவுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தொண்டி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி

தொண்டி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேருந்து நிலையத்துக்கு பட்டுக்கோட்டை, மீமசல், ராமேசுவரம், அறந்தாங்கி, ராமநாதபுர... மேலும் பார்க்க

வனத் துறை காப்பு நிலத்தில் மதுப்புட்டிகள் அகற்றம்

ராமேசுவரம் அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்பு நிலத்திலிருந்து நெகிழி, மதுப்புட்டிகளை சனிக்கிழமை அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் வனத் துறைக்கு சொந்தமான காப்... மேலும் பார்க்க

சூறைக்காற்று: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

முதுகுளத்தூா் அருகே சனிக்கிழமை பலத்த சூறைக்காற்று வீசியதால் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழத்தூவல் கிராமம் ... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை

பரமக்குடியில் சாலையில் நடந்து சென்ற கூலித் தொழிலாளியை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்த இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் சித்த... மேலும் பார்க்க

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல்: 3,283 போ் கைது

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக 3,283 பேரை கைது செய்ததாக இலங்கை போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தினைக்களம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கையில... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

கமுதியில் சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆத்திபட்டியைச்... மேலும் பார்க்க