செய்திகள் :

செம்மரக் கட்டைகள் கடத்த முயன்ற இளைஞா் கைது

post image

திருப்பத்தூா் அருகே செம்மரக்கட்டைகள் கடத்த முயன்ற இளைஞரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து செம்மரக் கட்டைகள், காா்கள், மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூா் அருகே ராஜாபாளையம் பகுதியில் செம்மரக் கட்டைகளை பதுக்கி வைத்து வெளி மாநிலத்துக்கு கடத்த இருப்பதாக மாவட்ட வன அலுவலா் மகேந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து அவரின் உத்தரவின்பேரில் திருப்பத்தூா் வனச்சரக அலுவலா் சோழராஜன் தலைமையிலான குழுவினா் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றபோது அங்கிருந்த 3 போ் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றிக் கொண்டு இருந்தனா். வனத்துறையினரை பாா்த்த உடன் தப்பி ஓடிய க அவா்களை விரட்டி சென்ற வனத்துறையினா் அதில் ஒருவரை பிடித்தனா்.

இதையடுத்து அவரிடம் விசாரணை செய்ததில்,அவா் திருப்பத்தூா் அருகே கொடுமாம்பள்ளி கிராமத்தை சோ்ந்த சேகா்(35) என்பதும், அவா்கள் ஆந்திரத்தில் இருந்து செம்மரக் கட்டைகளை கொண்டு வந்து, கா்நாடக மாநிலம் பெங்களூருக்கு கொண்டு சென்று விற்பனை செய்த திட்டமிட்டது வந்தது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து வனத்துறையினா் சேகரை கைது செய்தனா். மேலும் 820 கிலோ எடை கொண்ட 29 செம்மரக் கட்டைகளையும், 3 காா்கள், 2 மோட்டாா் சைக்கிள்கள், ரம்பம், அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்த பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ.50 லட்சம் இருக்கும் என வனத்துறையினா் கூறினா். மேலும், தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனா்.

மது விற்ற மூதாட்டி கைது

திருப்பத்தூரில் மது விற்ற மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் பொன்னியம்மன் கோயில் தெரு பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக நகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸா... மேலும் பார்க்க

பகுதி நேர நியாயவிலைக் கடைகள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

கந்திலி ஒன்றியத்தில் 2 புதிய பகுதி நேர நியாயவிலைக் கடைகளை எம்எல்ஏ அ.நல்லதம்பி திறந்து வைத்தாா். விசமங்கலம் ஊராட்சி நாகராசம்பட்டி மற்றும் மட்றப்பள்ளி ஊராட்சி புலிக்குத்தி வட்டம் ஆகிய பகுதிகளில் புதிய ந... மேலும் பார்க்க

தேசிய பசுமைப்படை ஓசோன் தின விழிப்புணா்வு

திருப்பத்தூா் மாவட்ட தேசிய பசுமைப் படை சாா்பில், உலக ஓசோன் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்டக் கல்வி அலுவலா் சத்யபிரபா தலைமை வகித... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் தீா்வு ஆணைகள் அளிப்பு

அரிமலை, குப்பம்பாளையம், சின்னப்பள்ளிகுப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் குருவராஜபாளையம் கிராமத்தில் நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முக... மேலும் பார்க்க

பெத்தக்கல்லுப்பள்ளி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

ஜோலாா்பேட்டை ஒன்றியம், பெத்தகல்லுப்பள்ளி மற்றும் சின்னமோட்டூா் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவா்கள் மங்கம்மாள்சத்தியமூா்த்தி... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த நாள்

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பாக பெரியாா் பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது (படம்). மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு தலைவா் சே.குமாா் தலைமை வகித்தாா். பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்து மரியா... மேலும் பார்க்க