செய்திகள் :

செல்போன் செயலி மூலம் பழக்கம்; வீடியோவை வைத்து இளம்பெண்ணை மிரட்டிய நபர் - கைதுசெய்த போலீஸ்!

post image

சென்னையைச் சேர்ந்த 21 வயதாகும் இளம்பெண்ணுக்கு செல்போன் செயலி ஒன்று மூலம் லிபின்ராஜ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்தனர். ஒருகட்டத்தில் இளம்பெண்ணை லிபின்ராஜ் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். அதன்பிறகு இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்திருக்கிறார்கள். அவ்வப்போது வீடியோ காலிலும் இருவரும் ஆபாசமாக பேசியிருக்கிறார்கள். அதை அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் லிபின்ராஜ் தன்னுடைய செல்போனில் ரெக்கார்டு செய்து வைத்திருந்திருக்கிறார்.

பாலியல்

இதற்கிடையில் இருவரும் தனிமையிலும் சந்தித்திருக்கிறார்கள். அதையும் இளம்பெண்ணுக்குத் தெரியாமல் லிபின்ராஜ் தன்னுடைய செல்போனில் வீடியோ, போட்டோஸ்களாக எடுத்து வைத்திருக்கிறார். இப்படியே இருவரும் பழகிவந்த நிலையில் இளம்பெண்ணுக்கு லிபின்ராஜின் சுயரூபம் தெரியவந்திருக்கிறது. அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், லிபின்ராஜிடம் வாக்குவாதம் செய்ததோடு அவரோடு போனில் பேசுவதையும் தவிர்த்து வந்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த லிபின்ராஜ், இளம்பெண்ணின் ஆபாச உரையாடல்கள், சில போட்டோஸ்களை அனுப்பி வைத்து மிரட்ட தொடங்கியிருக்கிறார்.

இந்தநிலையில்தான் இளம்பெண்ணை மிரட்ட அவரின் தனிப்பட்ட போட்டோஸ்கள், வீடியோக்களை இளம்பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் லிபின்ராஜ். அதைப்பார்த்த இளம்பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்ததோடு திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லிபின்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதனால் லிபின்ராஜை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த செல்போனை சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

லிபின்ராஜ்

இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், கைதான லிபின்ராஜிக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆட்டோ ஒட்டி வரும் லிபின்ராஜ், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி ஏமாற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இளம்பெண்ணின் பாட்டி உயிரிழந்த சமயத்தில் அவரை தனியாக சந்திக்க லிபின்ராஜ் கட்டாயப்படுத்தியிருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் லிபின்ராஜ், அந்தரங்க போட்டோஸ், வீடியோக்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியிருக்கிறார். அதன்பிறகே லிபின்ராஜ் குறித்து எங்களிடம் இளம்பெண் தரப்பு புகாரளித்ததன் பேரில் அவரைக் கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

பரமக்குடி: காரில் வந்து ஆடு திருட்டு; ஓட்டம் பிடித்த தம்பதியை விரட்டி பிடித்த போலீஸார்!

பரமக்குடி எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோயில் மேலத்தெருவை சேர்ந்தவர் சரசு. இவர் நேற்று முன் தினம் காலை அப்பகுதியை சேர்ந்த சிலருடன் அம்மன் கோயில் மற்றும் மாமாங்க தெப்பகுளம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிர... மேலும் பார்க்க

நர்சிங் மாணவியுடன் வந்த காதலன், வீட்டில் அடைக்கலம் கொடுத்த நண்பனையே கொன்ற கொடுமை - என்ன நடந்தது?

கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (25) தப்பாட்ட கலைஞர். இவருக்கு சர்மிளா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய நண்பர் அசூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக்(19), அறுவடை... மேலும் பார்க்க

`இன்ஷூரன்ஸ் இல்லாமல், எப்.சி. காலாவதியான போலீஸ் ஜீப் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு' - அதிர்ச்சி தகவல்

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் வாகனம் இன்சூரன்ஸ், எப்.சி காலாவதியான நிலையில் ஓட... மேலும் பார்க்க

புதுக்கோட்டை டு திருச்சி சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம்; அதிர்ச்சியடைந்த மக்கள்! - என்ன காரணம்?

சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சேலத்தில் இருந்து புறப்பட்டு இன்று மதியம் சுமார் 12.40 மணியளவில் புதுக்கோட்டை பகுதியை நெருங்கிக் கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடி... மேலும் பார்க்க

``நீதிபதிக்கு 15 லட்சம், எனக்கு 10 லட்சம்'' - லஞ்சம் வாங்கிய கிளார்க் கைது; நீதிபதி மீது வழக்கு

மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் இருக்கிறது. அந்த நிலத்திற்கு வேறு ஒருவரும் உரிமை கொண்டாடி வருகிறார். இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு... மேலும் பார்க்க

ஆவின்: கெட்டுப்போன வெண்ணெய் கொள்முதல்; கோடிக்கணக்கில் இழப்பு - வலுக்கும் சிபிசிஐடி விசாரணை கோரிக்கை

`மதுரை ஆவினுக்கு வடமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 81 டன் வெண்ணெய் கெட்டுப்போய், ஆவின் நிர்வாகத்துக்கு ரூ. 4 கோடி நிதியிழப்பை ஏற்படுத்திய அதிகாரிகளின் மோசடியை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்... மேலும் பார்க்க