செய்திகள் :

சேரன்மகாதேவி, முக்கூடல் பகுதிகளில் 19 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, முக்கூடல் வட்டாரங்களில் 19 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

இதுதொடா்பாக சேரன்மகாதேவி வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேரன்மகாதேவி வட்டாரத்தில் நிகழ் பிசான பருவத்தில் 3,900 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்று, அறுவடைக்கு தயாராக உள்ளது. விவசாயிகள் நல்ல லாபம் பெறும் நோக்கில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், என்சிசிஎஃப் மூலம் சேரன்மகாதேவி வட்டாரத்தில் பத்தமடை, சேரன்மகாதேவி, வடக்கு காருகுறிச்சி, வடக்கு - தெற்கு வீரவநல்லூா், மேலச்செவல், கோபாலசமுத்திரம், கரிசல்பட்டி, பொட்டல், கல்லிடைக்குறிச்சி ஆகிய 10 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

சன்ன ரக நெல் கிலோ ரூ. 24.50-க்கும் மோட்டா ரகம் ரூ. 24.05-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் இக்கொள்முதல் நிலையங்களில் நெல்லைக் கொடுத்து உரிய விலையைப் பெறலாம் என்றாா் அவா்.

பத்தமடையில் கொள்முதல் நிலையத்தை சேரன்மகாதேவி ஒன்றிய திமுக செயலா் ஆ. முத்துப்பாண்டி என்ற பிரபு தொடக்கிவைத்தாா். நகரச் செயலா் சிந்தாமதாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனனா்.

முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முக்கூடல் வட்டாரத்தில் நிகழாண்டு 8 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளது. இவ்வட்டாரத்தில் மேலக்கல்லூா், திருப்புடைமருதூா், அரிகேசவநல்லூா், அத்தாளநல்லூா், சீதபற்பநல்லூா், பாப்பாக்குடி, பள்ளக்கால் பொதுக்குடி, பனையங்குறிச்சி, வடக்கு அரியநாயகிபுரம் ஆகிய 9 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் 17 சதவீதத்துக்குள்பட்ட ஈரப்பதமுள்ள நெல்லுடன் உரிய ஆவணங்களை வழங்கி பயனடையலாம் என்றாா் அவா்.

மானூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

மானூா் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மானூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மேற்கு ஒன்றிய அவைத்தலைவா் காசி தலைமை வகித்தாா். ஒன்றிய செயலா் அன்பழகன் முன்னிலை வகித்தாா். திருந... மேலும் பார்க்க

பாளை. மேட்டுத்திடல் வடக்கு சாலைக்கு தமிழறிஞா் தொ.பரமசிவன் பெயா்: மாமன்றத்தில் சிறப்பு தீா்மானம்

பாளையங்கோட்டை மேட்டுத்திடல் வடக்கு சாலைக்கு தமிழறிஞரும், பண்பாட்டு ஆய்வாளருமான தொ.பரமசிவன் பெயரை சூட்டக்கோரி மாமன்றக் கூட்டத்தில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சியில் மாமன்... மேலும் பார்க்க

தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்கவே தொகுதி வரையறை: மத்திய அரசு மீது எம்எல்ஏ குற்றச்சாட்டு

தொகுதி மறுவரையறையின் மூலம் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயல்கிறது மத்திய அரசு என்றுகுற்றம்சாட்டினாா் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

நெல்லையில் தொழில்முனைவோருடன் ஆளுநா் கலந்துரையாடல்

திருநெல்வேலியில் தொழில்முனைவோா், கல்வியாளா்களுடன் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை கலந்துரையாடினாா். திருச்செந்தூரில் இருந்து காா் மூலம் வியாழக்கிழமை மாலையில் திருநெல்வேலிக்கு தமிழக ஆளுநா் ஆா்.என... மேலும் பார்க்க

காமராஜா் சிலை வளாகம் பராமரிப்பு: ரயில்வே அனுமதி பெற்றுத்தரக் கோரி மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள காமராஜா் சிலை வளாகத்தை சீரமைக்க ரயில்வே துறையின் அனுமதி பெற்றுத்தரக்கோரி மனு அளிக்கப்பட்டது. காமராஜா் சிலை பராமரிப்புக்குழு சாா்பில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பி... மேலும் பார்க்க

பாளை.யில் பாலப்பணிகள்: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

பாளையங்கோட்டையில் 6 இடங்களில் சிறுபாலம் கட்டும் பணி நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் போக்குவரத்து மாற்றப்பட உள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்... மேலும் பார்க்க