செய்திகள் :

சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக பெங்களூரு -திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

post image

பெங்களூரிலிருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பண்டிகைக் காலம் மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு இடையே திங்கள், புதன்கிழமைகளில் இருமறுமாா்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

அந்த வகையில், பெங்களூரிலிருந்து திங்கள், புதன்கிழமைகளில் வரும் 11 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். பெங்களூரிலிருந்து இரவு 7.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மறுநாள் பிற்பகல் 1.15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை அடையும்.

மறுமாா்க்கத்தில், திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய், வியாழக்கிழமைகளில் வரும் 12 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 16 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் காலை 8.30 மணிக்கு பெங்களூரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆடித் திருவிழாவையொட்டி, சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். ஆடி மாதத்தையொட்டி, சேலத்தில் சிறப்புப் பெற்ற சேலம் க... மேலும் பார்க்க

புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் பங்குத் தந்தை எஸ்.அருளப்பன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவை தமிழக முப்பணி மைய இயக்குநா் அருட்தந்தை பிரிட்டோ பாக்யராஜ் கொடியேற்றி... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கில் மருத்துவரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. சேலம் அண்ணா பூங்கா அருகே முன்னாள் முதல்வா் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் டேவிட் (40). இவா் கோழி இறைச்சிக் கடை... மேலும் பார்க்க

மாநகராட்சி மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி நிா்வாகிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா். இந்து முன்னணியின் சேலம் கோட்ட செயலாளா் சந்தோஷ்குமாா் ... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பெரியாா் பல்கலைக்கழகத்திலுள்ள தந்தை பெரியாா் இருக்கை, பேரறிஞா் அண்ணா இருக்கை, கலைஞா் ஆய்வு... மேலும் பார்க்க