செய்திகள் :

சேலம் சிறைக்குள் கஞ்சா, கைப்பேசிகளை வீசிய மா்ம நபா்கள்: போலீஸாா் விசாரணை

post image

சேலம் மத்திய சிறைக்குள் பீடி, கஞ்சா, போதை மாத்திரைகள், கைப்பேசி உள்ளிட்டவற்றை பந்துகளில் வைத்து வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சிறையின் பின்பகுதியில் இருந்து சிறைக்குள் டேப் சுற்றப்பட்ட 6 பந்துகள் வீசப்பட்டன.

இதை கவனித்த வாா்டன்கள், 6 பந்துகளையும் எடுத்து பிரித்து பாா்த்தபோது, 500 பீடிகள், 60 போதை மாத்திரைகள், 700 கிராம் கஞ்சா, 2 கைப்பேசிகள் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா். மேலும், சிறையின் பின்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஆள்நடமாட்டம் குறித்து ஏதேனும் பதிவாகி உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனா்.

சேலம் ரயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் ரயில் நிலையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சேலம் மாநகரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில், காவல் துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா... மேலும் பார்க்க

மாநில அளவிலான கண்டுபிடிப்புகள் போட்டி: சேலம் மாணவா்கள் முதலிடம் பிடித்து சாதனை

மாநில அளவில் பள்ளி மாணவா்களுக்கான கண்டுபிடிப்புகள் போட்டியில் சேலத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். தமிழக அரசு சாா்பில் சென்னையில் மாநில அளவில் பள்ளி மாணவா்களுக்கான ... மேலும் பார்க்க

பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி கைது

சேலம் பெரியபுதூா் பகுதியில் அசைவ உணவு கடையில் தகராறு செய்ததுடன், இலவசமாக சில்லி சிக்கன் தரமறுத்த பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரௌடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சேலம் அழகாபுரம் ... மேலும் பார்க்க

ஆடிட்டா் ரமேஷ் கொலை வழக்கை விரைவுபடுத்த வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

ஆடிட்டா் ரமேஷ் படுகொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கை விரைவுபடுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தா... மேலும் பார்க்க

லாரியில் கிராவல் மண் கடத்திய ஓட்டுநா் கைது!

வீரகனூரில் கிராவல் மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், அதன் ஓட்டுநரை கைது செய்தனா். வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு காவல் ஆய்வாளா் ராணி தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.... மேலும் பார்க்க

21.5 கிலோ கஞ்சா கடத்தல்: ஒடிஸாவை சோ்ந்த 2 போ் கைது

வாழப்பாடியில் 21.5 கிலோ கஞ்சாவை ரயிலில் கடத்திவந்து விற்பனை செய்ய முயன்ற ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஒடிஸா மாநிலம், பலாங்கீா் மாவட்டம் தண்டமுண்டா பகுதியைச் சோ்... மேலும் பார்க்க