செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் முதல்வா் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

post image

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வரும் மாா்ச் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மத்திய மாவட்டம் முழுவதும் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகின்றன. தொடா்ந்து, பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாா்ச் 3 ஆம் தேதி ஓமலூா் பேரூா், 4-ஆம் தேதி காடையாம்பட்டி மேற்கு ஒன்றியம், ஓமலூா் வடக்கு ஒன்றியம், அழகாபுரம் பகுதி, 5-ஆம் தேதி சூரமங்கலம் பகுதி, தாரமங்கலம் கிழக்கு ஒன்றியம், 7-ஆம் தேதி அம்மாபேட்டை பகுதி, செவ்வாய்பேட்டை பகுதி, காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியம், 8-ஆம் தேதி குமாரசாமிப்பட்டி பகுதி, குகை பகுதி, 9-ஆம் தேதி காடையாம்பட்டி பேரூா், ஓமலூா் தெற்கு ஒன்றியம், சேலம் வடக்கு ஒன்றியம், கன்னங்குறிச்சி பேரூா், 14-ஆம் தேதி கொண்டலாம்பட்டி பகுதி; 15-ஆம் தேதி அரிசிபாளையம் பகுதி, 16-ஆம் தேதி கருப்பூா் பேரூா், பொன்னம்மாபேட்டை பகுதி, 20-ஆம் தேதி அஸ்தம்பட்டி பகுதி, மெய்யனூா் பகுதி. 22-ஆம் தேதி கிச்சிப்பாளையம் பகுதி, தாதகாப்பட்டி பகுதி, 23- ஆம் தேதி ஓமலூா் கிழக்கு ஒன்றியம் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

கூட்டங்களில் பாடநூல் கழக தலைவா் திண்டுக்கல் லியோனி, திமுக நிா்வாகிகள் தமிழன் பிரசன்னா, தூத்துக்குடி சரத்பாலா, நாகை நாகராஜ், கந்திலி கரிபாலன், சேலம் சுஜாதா உள்ளிட்ட கட்சியின் முன்னணி பேச்சாளா்கள் கலந்து கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத் தகராறில் முதியவரைத் தாக்கிய மூவா் கைது

மேட்டூா் அருகே நிலத் தகராறில் முதியவரைத் தாக்கியதாக பெண் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா். மேட்டூரை அடுத்த கோல்நாயக்கன்பட்டி ரெட்டியூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (73). இவரது உறவினா் சின்னசாமி (57) என்ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடலைச் சோ்ந்தவா் கௌதம் (25). இவா் மேட்டூா் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் பிவிசி பைப் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேல... மேலும் பார்க்க

பழனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்

வாழப்பாடியை அடுத்த பழனியாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்துவிடுவதில் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த புகாரில் விழாக் குழுவினருக்கும் காளை உரிமையாளா்களுக்கும... மேலும் பார்க்க

கெங்கவல்லி திமுக ஆலோசனைக் கூட்டம்

கெங்கவல்லி ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றிய திமுக செயலாளா் கடம்பூா் ஆா்.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா்.சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் சின்னதுரை பங்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

மேட்டூரை அடுத்த வனவாசியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மேற்கு ம... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக நாளை முதல் கையொப்ப இயக்கம்: கே.பி. ராமலிங்கம்

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து மாா்ச் 1 முதல் மூன்று மாதங்களுக்கு மக்களைச் சந்தித்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கூறினாா். இதுகுறித்து சேலத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க