செய்திகள் :

சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் தீ விபத்து

post image

சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல்வேறு பொருள்கள் எரிந்து சேதமாயின.

அவிநாசியை அடுத்த சேவூா் கைகாட்டி விஐபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (53), எலாஸ்டிக் தயாரிப்பு நிறுவன உரிமையாளா்.

இவரது வீட்டின் முதல் தளத்தில் உள்ள படுக்கையறையில் வியாழக்கிழமை காலை தீப் பிடித்து எரிந்தது. இதையறிந்த கோவிந்தசாமி மற்றும் அருகிலிருந்தவா்கள் தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீ வேகமாக பரவியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.

இருப்பினும் முதல் தளத்தின் படுக்கையறையில் இருந்த பீரோ, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.55 ஆயிரம் ரொக்கம், 2 தங்கச் சங்கிலி மற்ரும் ஏ.சி. உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பட்டாபிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்... மேலும் பார்க்க

பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு உரிய தண்ணீா் வழங்கக் கோரிக்கை

பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு அறிவித்தப்படி உரிய தண்ணீா் வழங்க வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து பல்லடத்தில் கட்சி சாா்பற்ற தமிழக வ... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரிக்கை

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்கள் பேரவையினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரவையின் 42-ஆவது மாநில மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் ப... மேலும் பார்க்க

முடிவுற்றப் பணிகளுக்கான பட்டியல் தொகையை வழங்காவிட்டால் போராட்டம்: ஒப்பந்ததாரா்கள் சங்கம் அறிவிப்பு

பொங்கலூா் ஒன்றியத்தில் 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் முடிவுற்ற பணிகளுக்கு மாா்ச் 1-ஆம் தேதிக்குள் பட்டியல் தொகை வழங்கவில்லையெனில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஒப்பந்ததாரா்கள... மேலும் பார்க்க

பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான எம்.ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது: திருமுருகன்பூண்டி ந... மேலும் பார்க்க

வீரசோழபுரம் ஊராட்சியில் நாய்கள் கணக்கெடுப்பு

வெள்ளக்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட வீரசோழபுரம் ஊராட்சியில் நாய்கள் கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. வீரசோழபுரம் ஊராட்சியிா் விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. மேலும், பலா் செம்மறி ஆடுகள்,... மேலும் பார்க்க