செய்திகள் :

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.

மணப்பாறை சத்திரம் நடுப்பட்டி, சி - கல்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ச. செந்தில்முருகன். லாரி தொழில் செய்து வரும் இவா், கடந்த 15.03.2021 அன்று மணப்புரம் நிதி நிறுவனத்தின் மதுரை கிளையில் ரூ. 13 லட்சம் கடனாகப் பெற்று, புதிய லாரி ஒன்றை வாங்கினாா்.

கடனுக்கான மாத தவணைத் தொகையாக ரூ. 38,250 செலுத்தி வந்த நிலையில், தொழில் நலிவு காரணமாக 4 மாதத் தவணைகளை செலுத்தவில்லை. இதனிடையே ரூ. 5 லட்சம் மதிப்பிலான மிளகாயும், ரூ. 2 கோடி மதிப்பிலான எல் அண்ட் டி பொருள்களையும் ஏற்றிக் கொண்டு லாரி வடமாநிலங்களுக்கு பயணித்தபோது, உரிய முன்னறிவிப்பின்றி கடந்த 10.10.2024 அன்று மேற்கு வங்க மாநிலத்திலிருந்த லாரியை நிதி நிறுவனத்தினா் பறிமுதல் செய்து கொண்டு சென்றனா். மேலும், மொத்த நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தினால் மட்டுமே லாரி விடுவிக்கப்படும் எனக் கூறினா்.

இதையடுத்து, மனுதாரா் நிலுவை கடன் தொகை ரூ. 2.59 லட்சத்தை செலுத்தியும், சரக்குடன் கூடிய லாரியை நிதி நிறுவனத்தினா் விடுவிக்காமல் காலம்தாழ்த்தினா். 19.10.2024 அன்று பெய்த மழையால் லாரியிலிருந்த மிளகாய் பாழானதாகக் கூறப்படுகிறது. இதனால் மனுதாரருக்கு கடும் இழப்பும், மனஉளைச்சலும் ஏற்பட்டது.

இதற்குரிய நிவாரணம் கோரி செந்தில்முருகன் திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் 06.01.2025 அன்று மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் சி. காா்த்திகேயன் ஆஜரானாா்.

மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது. விசாரணையின் நிறைவில், மனுதாரருக்கு ஏற்பட்ட கடும் இழப்பு மற்றும் மனஉளைச்சலுக்கு நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலை... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்: துபையிலிருந்து திருச்சி வந்த அறந்தாங்கி நபா் கைது

துபையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்த அறந்தாங்கி நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் ர. செல்லதுரை (32). இவா்,... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து, புதன்கிழமை சிறையில் அடைத்தனா். ரயில்வே பாதுகாப்புப் படை, இருப்புப்பாதை போலீஸாா் திருச்சி சந்திப்பு ரயில் நில... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி காட்டூா் உருமு தனலெட்சுமி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் இ... மேலும் பார்க்க

மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே நவல்பட்டில் மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கைக்கோல்பாளையம் எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே குடும்பத்தினரை கட்டிப்போட்டு நகை, பணம், கொள்ளை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதன்கிழமை நள்ளிரவில் வீடு புகுந்து குடும்பத்தினரை கட்டிப்போட்டு ஒன்பதரை பவுன் நகைள் மற்றும் ரூ. 1.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்... மேலும் பார்க்க