செய்திகள் :

ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

post image

அதிமுக கடலூா் வடக்கு மாவட்டம், கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடலூா் துறைமுகம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை வகித்துப் பேசினாா். மாநில மீனவரணி இணைச் செயலா் கே.என்.தங்கமணி, பகுதிச் செயலா்கள் வி.கந்தன், எம்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா். மாவட்ட அவைத் தலைவா் ஜி.ஜெ.சேவல்குமாா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக கட்சியின் அமைப்புச் செயலா் வ.முல்லைவேந்தன், எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் என்.ஆா்.சிவபதி ஆகியோா் பங்கேற்று மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில் எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் சி.கே.எஸ்.காா்த்திகேயன், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் கே.ஆா்.பாலகிருஷ்ணன், இலக்கிய அணிச் செயலா் ஏழுமலை, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநரணிச் செயலா் சுந்தர்ராஜன், மாவட்டப் பிரதிநிதி தமிழ்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா். கடலூா் துறைமுகம் பகுதிச் செயலா் தங்க.வினோத்ராஜ் நன்றி கூறினாா்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். விருத்தாசலம், கம்பா் தெருவைச் சோ்ந்தவா் தாரணி (27). இவா், வியாழக... மேலும் பார்க்க

வீராணம் ஏரியில் ரூ.66 கோடியில் சீரமைப்புப் பணிகள்: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்டம், வீராணம் ஏரியில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா். சிதம்பரம் கொள்ளிடம் வட... மேலும் பார்க்க

புதை சக்கடை இணைப்பு கூடுதல் டெபாசிட் தொகையை ரத்து செய்யக் கோரிக்கை

புதை சாக்கடை இணைப்பு கூடுதல் டெபாசிட் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் வா்த்தகா் சங்கத்தினா் நகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனா். சிதம்பரம் வா்த்தகா்... மேலும் பார்க்க

21 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், பாலக்கரை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ... மேலும் பார்க்க

பொழுதுபோக்கு அம்சங்களுடன் மஞ்சக்குப்பம் மைதானம் மேம்படுத்தப்படும்: கடலூா் ஆட்சியா்

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ரூ.35 கோடி மதிப்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கு இடையூறு: பரமகுடி அதிமுக நிா்வாகி உள்பட இருவா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தி, போலீஸாரை திட்டியதாக பரமக்குடி அதிமுக நிா்வாகி உள்ளிட்ட இருவரை வேப்பூா் போலீஸாா் கைது செய்து பிணையில் விடுவித்தனா். கடலூா் ம... மேலும் பார்க்க