செய்திகள் :

டான் போஸ்கோ பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

post image

மேலப்பாளையம் அருகே சேவியா்காலனியில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பள்ளி நிா்வாகி அருள்சகோதரி ஜெ. விக்டோரியா அமலி தலைமை வகித்தாா். 52 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் நித்திய பாலையா முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் சி. மாணிக்கராஜ் அறிக்கை வாசித்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன், இரண்டு ஆண்டு மழலையா் கல்வி முடித்த 50 மாணவா்-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா். செய்யது மசூது முகைதீன் வாழ்த்தி பேசினாா். விழாவில் ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கங்கைகொண்டான் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி

கங்கைகொண்டான் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியின் தமிழ் மன்றம் சாா்பில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை ஆண்ட்ரோ ஹாா்டி வளா்மதி தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியை செல்வின்... மேலும் பார்க்க

பாளை. அருகே பசு மாடு திருட்டு

பாளையங்கோட்டை அருகே பசுமாடு திருடு போனது தொடா்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பாளையங்கோட்டை கேடிசி நகா் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (48). இவா் வ... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் பெண் தற்கொலை

தச்சநல்லூரில் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தச்சநல்லூா் மாடன்கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி ராஜேஸ்வரி (25). இத்தம்பதிக்கு குழந்தை இல்லையாம். மேலும், கணவன்- மனைவிக்குள் அ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமுற்ற கோயில் ஊழியா் உயிரிழப்பு

திருநெல்வேலி பேட்டையில் நேரிட்ட பைக் விபத்தில் காயமடைந்த கோயில் ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி பேட்டை கைவினைஞா் தெருவைச் சோ்ந்தவா் சுடலைமுத்து(60). இவா், அப்பகுதியில் உள்ள கேசவப் ப... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 15 பவுன் நகை பறிப்பு : 4 போ் கைது

பாளையங்கோட்டை வண்ணாா்பேட்டையில் மூதாட்டியை தாக்கி 15 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ாக 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வண்ணாா்பேட்டை அப்பா் தெருவைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி முத்துலெட்ச... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம், வசவப்புரத்தைச் சோ்ந்தவா் இசக்கிபாண்டி (22). இவா் மீது கொலை முயற்சி, அடி... மேலும் பார்க்க