செய்திகள் :

‘டாம்கோ’ திட்டத்தில் கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்

post image

அரியலூா் மாவட்ட சிறுபான்மையினா், டாம்கோ திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தனிநபா் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்வி கடன் போன்ற கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

திட்டம் 1-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமம் மற்றும் நகா்ப் புறமாயின் ரூ.3,00,000-க்கு மிகாமலும், திட்டம் 2-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இதில் திட்டம் 1-இல் தனிநபா் கடன் ஆண்டுக்கு 6% வட்டி விகிதத்திலும் , அதிக பட்ச கடனாக ரூ.20,00,000-மும், திட்டம் 2-இல் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000- கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிக பட்ச கடனாக ரூ.10,00,000-கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடன் நபா் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டுக்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

திட்டம் 2-இல் கீழ் ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் நபா் ஒருவருக்கு ரூ.1,50,000- வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழிநுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-இன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவா்களுக்கு 8%, மாணவியா்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினா்கள் மேற்கண்ட கடன்களை பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

பி.எம்.கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்தில், பி.எம்.கிசான் திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சோ்ந்து பயன்பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இது குறித்து அவா் தெரிவித்தது: பிர... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

அரியலூா் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஓட்டக்கோவில், கூத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கொளஞ்சி மகன் அருண்குமாா் (23). புதுப்பாளையத... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் பழைய இடத்தில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த அஞ்சலகம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பராமரிப்புப் பணி காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட அஞ்சலகம், மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட தொடங்கியது. ஜெயங்கொண்டம் நான்குச் சாலை சந்திப்பு அருகே சொந்த கட்டடத்தில் இ... மேலும் பார்க்க

செந்துறைப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில், ரூ.77.80 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 பணிகள் திறந்து வைக்கப்பட்டு, ரூ.1.04 கோடியில் 13 புதிய பணிகளுக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல... மேலும் பார்க்க

காா்ல் மாா்க்ஸ், அம்பேத்கா், பெரியாா் சிலைகள் அமைக்க அடிக்கல்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த அங்கனூரில், மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவனின் தாயாருக்கு சொந்தமான இடத்தில், காரல்மாா்க்ஸ், அம்பேத்கா் மற்றும் பெரியாா் ஆகியோரின் சிலைகள் அமைப்பதற்கு ... மேலும் பார்க்க

மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்கக் கோரி சீரமைப்புக் குழு மே 17-இல் ஆா்ப்பாட்டம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவித்து, சாலைப் பணிகளை தொடங்க வலியுறுத்தி மீன்சுருட்டியில் மே 17- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக கல்லாத்தூா்... மேலும் பார்க்க