செய்திகள் :

டி20 கிரிக்கெட்டில் இதுவே என்னுடைய பெருமைமிகு தருணம்; மனம் திறந்த ஆண்ட்ரே ரஸல்!

post image

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய பெருமைமிகு தருணத்தை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆண்ட்ரே ரஸல் பகிர்ந்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரஸல், சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளோடு ஓய்வு பெறவுள்ளதாக ரஸல் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் விளையாடியதே தன்னுடைய பெருமைமிகு தருணம் என ஆண்ட்ரே ரஸல் மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் நேர்காணலில் அவர் பேசியதாவது: கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடியதே டி20 கிரிக்கெட்டில் என்னுடைய பெருமைமிகு தருணம். மற்ற பேட்டர்கள் ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். அதன் பின், நானும் லெண்டல் சிம்மன்ஸும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றோம்.

இந்தியாவுக்கு எதிரான அந்த அரையிறுதிப் போட்டியில் 190 ரன்களுக்கும் அதிகமான இலக்கை துரத்தினோம். ரசிகர்கள் அனைவரும் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்க, சிறிது அழுத்தம் இருந்தது. ஆனால், ஆடுகளம் நன்றாக இருந்ததால் நம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெற்றோம். இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அங்கம் வகித்துள்ளது சிறப்பான உணர்வைத் தருகிறது. 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற தருணம் மிகவும் சிறப்பானது. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டி மற்றும் இறுதிப்போட்டி இவை இரண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக நான் விளையாடிய பெருமைமிகு தருணங்கள் என்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில், ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் அதிரடியாக 43 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

West Indies batsman Andre Russell has shared his proudest moment in T20 cricket.

இதையும் படிக்க: கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன? ரவி சாஸ்திரி பதில்!

2-வது ஒருநாள்: இங்கிலாந்துக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநா... மேலும் பார்க்க

கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன? ரவி சாஸ்திரி பதில்!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்படுவதற்கான காரணத்தை இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட... மேலும் பார்க்க

கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!

கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், இ... மேலும் பார்க்க

ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை இனிதான் தொடங்குகிறது: முன்னாள் ஆஸி. கேப்டன்

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை மான்செஸ்டர் டெஸ்ட்டிலிருந்து தொடங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கும் ஜோ ரூட்!

இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கிப் பயணித்து வருகிறார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ... மேலும் பார்க்க

முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்!

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றையப் போட்டியி... மேலும் பார்க்க