செய்திகள் :

தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (பிப். 27) பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 64,080-க்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.64,360-க்கும்,திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.8,055-க்கும், பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.64,440-க்கும், செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ. 64,600-க்கும் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.64,400-க்கு விற்பனையானது.

பி.இ.-பி.எட். முடித்தவா்கள் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றலாம்: அரசாணை

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மேலும் கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 8,010-க்கும் , பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 64,080-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலை தொடா்ந்து 4 ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.106-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,06,000-க்கும் விற்பனையாகிறது.

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாளை(பிப். 28) சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவன... மேலும் பார்க்க

ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டின் நிலப்பகுதிகளிலும் கடல்பரப்ப... மேலும் பார்க்க

மறுகால் குறிச்சியில் சாலையில் உலவிய கரடி: மக்கள் அச்சம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மறுகால் குறிச்சியில் சாலையில் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிக்கு வியாழக்கிழமை வந்த கரடியால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.மேற்கு தொடர்ச்சி மலை வன... மேலும் பார்க்க

அயனாவரத்தில் ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னையில் 6 போ் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை, பெண்ணின் மீது கொலை தாக்குதல் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் எட்வீன். இவரது மகன... மேலும் பார்க்க

ஆலங்குடி குருபரிகார கோயிலில் மகாசிவராத்திரி வழிபாடு

நீடாமங்கலம்: நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோவிலில் மகாசிவராத்திரி வழிபாடு புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற... மேலும் பார்க்க

கோவையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் புறநகர் பகுதியில் கல்லூரிகளில... மேலும் பார்க்க