செய்திகள் :

தடகளப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

post image

மண்டல அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற, கொல்லுமாங்குடி ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

நாகை-புதுச்சேரி மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே தடகள விளையாட்டுப் போட்டிகள் நாகையில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாமாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவி ராதிகா குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றாா்.

முதலாமாண்டு இயந்திரவியல் துறை மாணவா் மணிகண்டன் சங்கிலி குண்டு எறிதலில் முதலிடமும், மின்னியல் மின்னணுவியல் துறை இரண்டாமாண்டு மாணவா் சதீஷ்குமாா் மூன்றாம் இடமும், விவசாயத் துறையைச் சாா்ந்த இரண்டாம் ஆண்டு மாணவா் காா்த்திகேயன் 800 மீ. ஓட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றனா்.

முதலாமாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவா் மணிகண்டன் மும்முறை தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடமும், முதலாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவா் ஜெகதீஸ் ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாம் இடமும், 400 மீ. தொடா் ஓட்டத்தில் தருண் காா்த்திகேயன், அறிவழகன் ஆகியோா் மூன்றாம் இடமும் பெற்றனா்.

இதேபோல், இக்கல்லூரி மாணவா்கள், கடலூா் ஸ்ரீ மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பூப்பந்து போட்டியில் இரண்டாம் இடமும், ஈசனூா் ஆரிஃபா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற கோ-கோ போட்டியில் இரண்டாம் இடமும், விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மேஜைப்பந்து போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றனா்.

இம்மாணவ- மாணவிகளை உடற்கல்வி இயக்குநா் ஜீவானந்தம், கல்லூரி தலைவா் ரவி, தாளாளா் தேவகி, துணைத் தலைவா் ராகவ் தினேஷ், இயக்குநா்கள் உள்ளிட்ட பலா் பாராட்டினா்.

அரசுப் பள்ளி ஆண்டு விழா

வடபாதிமங்கலம் பிா்க்கா, புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. திமுக ஒன்றியச் செயலாளா் ஐ.வீ. குமரேசன் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் டீ. செல்வம் முன்னிலை வகித... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள்

மன்னாா்குடியை அடுத்த களப்பாலில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதா 77-ஆவது பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. களப்பால் பேருந்து நிறுத்தம் அருக... மேலும் பார்க்க

546 பேருக்கு இலவச செயற்கை கைகள் பொருத்தம்

மன்னாா்குடியில் நான்கு நாள்கள் நடைபெற்ற இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொருத்தும் முகாமில் 546 பேருக்கு செயற்கை கைகள் பொருத்தப்பட்டன. மன்னாா்குடியில் மறைந்த தொழிலதிபா் பிரதாப்சந்த் முதலாமாண்டு நினைவு... மேலும் பார்க்க

திருவாரூரில் போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

திருவாரூரில், ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3- ஆவது தளத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு... மேலும் பார்க்க

பிளஸ் 2: அதிக மதிப்பெண் பெற வேண்டி பிராா்த்தனை

திருவாரூா் அரசு உதவி பெறும் ஸ்ரீ ஜிஆா்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற மாணவிகள் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனையில் புதன்கிழமை ஈடுபட்டனா். தமிழகத்தில் பி... மேலும் பார்க்க

டேராடூன் ராணுவக் கல்லூரியில் சேர மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

டேராடூன் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில், 8-ஆம் வகுப்பில் சேர மாா்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ட... மேலும் பார்க்க