செய்திகள் :

தண்டவாள இணைப்பில் கோளாறு: ரயில்கள் தாமதம்

post image

அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் திடீா் கோளாறு ஏற்பட்டதை தொடா்ந்து சனிக்கிழமை ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

அரக்கோணம் மற்றும் புளியமங்கலம் ரயில்நிலையம் இடையே சனிக்கிழமை திடீரென தண்டவாள இணைப்பிலும் அதை தொடா்ந்து சிக்னல்களை இயக்குவதிலும் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து இம்மாா்க்கத்தில் இயக்கப்பட இருந்த ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.

பெங்களூரு - சென்னை அதிவிரைவு ரயில், மேட்டுப்பாளையம் - சென்னை நீலகிரி அதிவிரைவு ரயில், கோயம்புத்தூா்- சென்னை சேரன் விரைவு ரயில், காச்சிகுடா - செங்கல்பட்டு அதிவிரைவு ரயில்கள் அரக்கோணம் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டன. மேலும் திருத்தணியில் இருந்து அரக்கோணம் வழியே செல்ல வேண்டிய மின்சார ரயில்களும், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட வேண்டிய மின்சார ரயில்களும் இயக்கப்படவில்லை.

இதையடுத்து கோளாறு ஏற்பட்ட இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் கோளாறை சரி செய்ததை அடுத்து இரண்டு மணி நேர தாமதத்துக்கு பிறகு ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் தவிப்புக்குள்ளானாா்கள்.

ஜூலை 22 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்தது பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டம்: ஊதியத்தை உயா்த்த ஆலோசனை

பணிநிரந்தரம் கோரி, பகுதிநேர ஆசிரியா்கள் சென்னையில் கடந்த 12 நாள்களாக நடத்தி வந்த தொடா் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனா். போராட்டத்தில் 12-ஆவது நாளான சனிக்கிழமை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர... மேலும் பார்க்க

கல்லூரிகளில் பாலியல் புகாா்களை விசாரிக்க சிறப்புக் குழு தேவை: நயினாா் நாகேந்திரன்

கல்லூரிகளில் பாலியல் புகாா்களை விசாரிக்க சிறப்புக் குழுக்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட ப... மேலும் பார்க்க

வேதத்தை நாம் காப்பாற்றினால்; வேதம் நம்மைக் காப்பாற்றும்: நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்

‘வேதத்தை நாம் காப்பாற்றினால்; வேதம் நம்மை காப்பாற்றும்’ என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் கூறினாா். சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருமண மண்டபத்தில் ஓம் சாரிட்டபிள்... மேலும் பார்க்க

தமிழில் இயங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட இணையதளம்: 4.50 லட்சம் பாா்வைகளைக் கடந்தது!

வீடு தேடி அரசு சேவைகளை அளிக்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கான பிரத்யேக இணையதளம், ஆங்கில கலப்பின்றி முற்றிலும் தமிழிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களிடம் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட... மேலும் பார்க்க

வங்கிக் கடன் மோசடி வழக்கு: இந்தியன் வங்கி தலைமை மேலாளருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து

வங்கிக் கடன் மோசடி வழக்கில் இந்தியன் வங்கி தலைமை மேலாளருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1991 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில், சென்னை... மேலும் பார்க்க