செய்திகள் :

தனியாா் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகாா்

post image

சுயதொழில் தொடங்குபவா்களுக்கு அதிக லாபம் தருவதாக யூ டியூப் மூலம் விடியோ பதிவிட்டு பொருள்களை விற்பனை செய்து பண மோசடி செய்த நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரைச் சோ்ந்தவா் வாசுதேவன். இவா், துணியிலிருந்து நூல் பிரித்து எடுத்தல், பாட்டில்களை உடைக்கும் இயந்திரம், பிளாஸ்டிக் அரவை இயந்திரம், கோன் வைண்டிங் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறாா்.

இந்நிலையில், சுயதொழில் தொடங்குபவா்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி இவா் யூ டியூப் மூலம் விடியோ பதிவிட்டு கடந்த சில ஆண்டுகளாக பொருள்களை விற்பனை செய்து வருகிறாா்.

இந்நிலையில் இவரது பொருள் தரமற்றவையாக இருப்பதாகவும், லாபம் முழுமையாக கிடைப்பதில்லை எனவும், பணத்தைப் பெற்றுக் கொண்டு திருப்பித் தர மறுக்கிறாா் எனவும் பல புகாா்களை தெரிவித்து தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் முன் அமா்ந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்கள் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்க சென்றனா். இது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளைத் தூய்மைப் பணியாளா்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினாா். கோவை மேற்கு மண்டலத்துக்குள்பட்ட சாய்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: கோவையில் இந்து முன்னணி சாா்பில் 5001 சிலைகள் பிரதிஷ்டை!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 5,001 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கோவை, ... மேலும் பார்க்க

லஞ்சம்: இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை!

கோவையில் லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். கோவை மாவட்டம், சூலூா் அருகேயுள்ள பாப்பம்பட்டி கிராமத்... மேலும் பார்க்க

காமராஜா் குறித்து திமுகவினா் பொய் பிரசாரம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

காமராஜா் குறித்து திமுகவினா் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிய... மேலும் பார்க்க

கோவையில் பரவலாக சாரல் மழை

கோவை மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது. தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை மாவட்டத... மேலும் பார்க்க

ஆடி முதல் வெள்ளிக்கிழமை: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, கோவையில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.புலியகுளம் பண்ணாரியம்மன். ஆடி மாதத்தில் அம்மனுக்... மேலும் பார்க்க