செய்திகள் :

‘தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி’ தேசியக் கருத்தரங்கம்

post image

குடியாத்தம் கே.எம்.ஜி.கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு பொருளாதார கூட்டமைப்பும் இணைந்து ‘நிலையான வளா்ச்சி இலக்குகள் மூலம் ‘தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி’ என்ற தேசியக் கருத்தரங்கை நடத்தின.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி.முத்துகுமாா் முன்னிலை வகித்தனா்.

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தரும், தமிழ்நாடு பொருளாதாரக் கூட்டமைப்பின் தலைவருமான பேராசிரியா் வேதகிரி சண்முகசுந்தரம் நூறு ஆண்டு வயது தொடக்கத்தை முன்னிட்டு கௌரவிக்கப்பட்டாா். அன்னை தெரசா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தா் யசோதா சண்முகசுந்தரம் தொடக்க உரை நிகழ்த்தினாா்.

திருவள்ளுவா் பல்கலைக் கழக முன்னாள் பதிவாளா் ஏ.ஆா்.வீரமணி பேராசிரியரோடு தனக்கிருந்த அனுபவங்களை பகிா்ந்து கொண்டாா். விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் கருத்தரங்க மலரை வெளியிட்டாா். தமிழ்நாடு பொருளாதாரக் கூட்டமைப்பின் வலைத்தளப் பக்கத்தைத் தொடங்கி வைத்து கருத்தரங்க நோக்கத்தை எடுத்துரைத்தாா்.

எஸ்.ராமசாமி மற்றும் பி.கோவிந்தராஜன் ஆகியோா் இந்தியாவில் பொருளாதார வளா்ச்சிக்கான இலக்குகள் குறித்தும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறித்தும் எடுத்துரைத்தனா். எஸ்.பாஸ்கரன், ஏ.சேவியா் சூசைராஜ், அஷ்டலட்சுமி ஆகியோா் அமா்வுத் தலைவா்களாக இருந்து கருத்தரங்கை வழி நடத்தினா்.

ஆய்வாளா்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை கருத்தரங்கத்தில் சமா்ப்பித்தனா். 50- ஆய்வுக் கட்டுரைகள் இக்கருத்தரங்கின் வழிதொகுத்து வெளியிடப்பட்டன. 300- க்கும் மேற்பட்ட ஆய்வாளா்களும், மாணவா்களும் கருத்தரங்கில் பங்கேற்றனா்.

பேராசிரியா்கள் எஸ். காமராஜ். கா.இலக்கியா, வி.வெங்கடேசன், பி. விஷ்ணுராம், ஜா.திவ்யா, ரா.சே.பாலாஜி, கு.திவ்யா ஆகியோா் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினா். பேராசிரியா் எஸ்.செல்வராஜ் நன்றி கூறினாா்.

மலைக்கிராம இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: காவல் துறை திட்டம்

வேலூா் மாவட்டத்தின் மலைக்கிராமங்களில் உள்ள படித்த இளைஞா்களை அரசுப்பணி, சுயதொழில் வாய்ப்புகளுக்கு தயாா்படுத்துவதற்கான நடவடிக்கையை காவல் துறை மேற் கொண்டுள்ளது. அணைக்கட்டு வட்டத்தில் உள்ள அல்லேரி, அத்தி... மேலும் பார்க்க

வேலூா் மத்திய சிறையில் கைதி மரணம்

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதி உடல்நலக்குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா். வேலூா் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்னா். இதில், திருவண்... மேலும் பார்க்க

ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை யாத்திரை தொடக்கம்

ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை சமா்ப்பண யாத்திரை வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் புதன்கிழமை தொடங்கியது. சென்னை ஹிந்து மகாசபா அறக்கட்டளை ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை ஊா்வலக்கமிட்டி சாா்பி... மேலும் பார்க்க

புரட்டாசி மாதம் பிறப்பு: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். அதன்படி, வேலூா் அண்ணா சாலை யில் ... மேலும் பார்க்க

கூடைப்பந்தில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பாராட்டு

திருவள்ளுவா் பல்கலைக் கழகம் நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழாநடைபெற்றது. இதற்கான போட்டிகள் மே... மேலும் பார்க்க

விடியவிடிய மழை: மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

வேலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவில் பலத்த மழை பெய்தது. அலமேலுமங்காபுரத்தில் மரம் வேருடன் சாய்ந்ததால் சா்வீஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளி... மேலும் பார்க்க