செய்திகள் :

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்: அண்ணாமலை

post image

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும், அப்போது சித்தாந்த அடிப்படையில் கட்சி வழக்குகள் விசாரணை மேற்கொள்ளப்படும் என பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மறைந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் வி. ரமேஷ் 12-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று(சனிக்கிழமை) அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை பங்கேற்று அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் அவர் பேசியதாவது: சேலம் ஆடிட்டர் ரமேஷ், அரவிந்த் போன்றவர்கள் பாஜகவில் வளர்ந்து வந்த தலைவர்களாவர். இவர்கள் எல்லாம் பெரிய அளவில் வந்துவிடக்கூடாது என்ற நோக்கிலே அவர்களை படுகொலை செய்துள்ளனர். 2013 ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை சம்பவத்தில், அப்போதைய ஆட்சியாளர்கள் குற்றவாளிகளைப் பிடிக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. முதலில் சிலரை குற்றவாளி என்றனர், அதன் பிறகு வேறு சிலரை காண்பித்தனர். பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித்ஷாவிடம் வலியுறுத்தி வழக்குகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாஜக கட்டாயம் ஆட்சிக்கு வரும். அப்போது சித்தாந்த அடிப்படையில் ஆடிட்டர் ரமேஷ் போன்ற தியாகிகளின் மரணத்துக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், "நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத் திருட்டு அதிகளவில் நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது. திமுகவைச் சேர்ந்த சிலர் இதற்கு உடந்தையாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழக அரசு உரிய விசாரணைக் குழு அமைத்து சிறுநீரகத் திருட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் பத்திரிக்கையாளர்களை நேரடியாகச் சந்தித்து தனது குறைகளைத் தெரிவிப்பது விதிகளுக்கு புறம்பானது என்றாலும், அவருடைய மனக்குமுறலை தெரிவிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு அவர் ஆளாகியுள்ளார். இந்த பிரச்னையில் முதல்வர் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக எந்தவித குழப்பமும் இல்லை. அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எடுக்கும் முடிவே இறுதியானது.

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று கூறியது 2026 தேர்தலுக்குப் பிறகு இருக்கலாம் என்றார்.

அப்போது நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.சரவணன், மேற்கு மாவட்ட தலைவர் எம். ராஜேஷ்குமார் மற்றும் பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Former BJP state president K. Annamalai said that BJP comes to power in Tamil Nadu.

இதையும் படிக்க | தேர்தல் பிரசாரத்தின் இடையே பிரசாந்த் கிஷோர் காயம்!

மு.க. முத்துவின் உடலைப் பார்த்து கதறி அழுத மு.க. அழகிரி!

மறைந்த மு.க. முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அவரது சகோதரர் மு.க. அழகிரி கண்ணீர்விட்டு அழுதார். மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையி... மேலும் பார்க்க

இரவு 7 மணி வரை செனனை, 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு செனனை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும... மேலும் பார்க்க

பகுதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

பகுதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பொய்யான வாக்குறுதிகள் கூறி ஆட்சிக்கு வந்த திம... மேலும் பார்க்க

சென்னையில் பரவலாக மழை!

சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று பிற்பகலில் பரவலாக மழை பெய்து வருகிறது. கே.கே. நகர், வடபழனி விருகம்பாக்கம், ராயபுரம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக ... மேலும் பார்க்க

மோதல் வழக்கு: சீமான் உள்ளிட்ட 19 பேர் விடுதலை!

மதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் சீமான் உள்ளிட்ட 19 பேரை விடுதலை செய்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீனவர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு: இபிஎஸ்

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ”மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நில... மேலும் பார்க்க