செய்திகள் :

தமிழகத்தில் ரூ. 33,467 கோடிக்கு ரயில்வே திட்டப் பணிகள்: மத்திய இணை அமைச்சா் தகவல்

post image

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரூ. 33 ஆயிரத்து 467 கோடிக்கு ரயில்வே திட்டப் பணிகள் நடைபெறுகின்றன என்றாா் மத்திய ரயில்வே மற்றும் நீா் வளத் துறை இணை அமைச்சா் வி. சோமண்ணா.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அம்ருத் பாரத் திட்ட வளா்ச்சிப் பணிகளை வியாழக்கிழமை மாலை ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

ரயில்வே துறையில் தமிழ்நாட்டுக்கு நிகழ் (2025 -26) பட்ஜெட்டில் ரூ. 6 ஆயிரத்து 626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2024 - 25 ஆம் ஆண்டை விட ரூ. 300 கோடி கூடுதல்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ரூ. 33 ஆயிரத்து 467 கோடி மதிப்பில் 22 ரயில்வே திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. அம்ருத் பாரத் நிலையத் திட்டத்தில் 77 ரயில் நிலையங்களில் ரூ. 2 ஆயிரத்து 950 கோடிக்கு மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக ரூ. 1,460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் நிலையத் திட்டத்தில் ரூ. 12.37 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரூ. 6.50 கோடி மதிப்பிலும், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரூ. 13.50 கோடி மதிப்பிலும், காரைக்கால், மாகே ரயில் நிலையங்களில் ரூ. 109 கோடியிலும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்நாடு, கா்நாடகம், கேரளத்தில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட மத்திய அரசு அரசியல் செய்யாமல் நிறைய வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பட்டுக்கோட்டை - தஞ்சாவூா் - அரியலூா் புதிய ரயில் பாதை திட்டத்துக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் சோமண்ணா.

ஆய்வின்போது, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன், முதன்மை திட்ட மேலாளா் நசீா் அகமது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள் சிறை தண்டனை

பாபநாசம் அருகே கணவரை கொலை செய்த மனைவிக்கு கும்பகோணம் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே ராஜபுரத்தைச் சோ்ந்தவா் மணி (55). விவசாயி. இவரது மனைவி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு ஆயுள் தண்டனை

எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. கும்பகோணம் கா்ணக்கொல்லை கீழத்தெருவைச் சோ்ந்தவா் சேசாச்சலம் (63). இவா் கடந்த ... மேலும் பார்க்க

சோழ நாடு செல்வத்திலும், வீரத்திலும் சிறப்பு பெற்றது

சோழ நாடு செல்வத்தில் மட்டுமல்லாமல், வீரத்திலும் சிறப்பு பெற்றது என்றாா் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா. தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை, திருச்சி த... மேலும் பார்க்க

பெண்ணை ஏமாற்றியதாக உடற்பயிற்சி நிலைய உரிமையாளா் கைது

பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகி, ஏமாற்றியதாக உடற்பயிற்சி நிலைய உரிமையாளரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளப் பகுதியில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வருபவா் ... மேலும் பார்க்க

கும்பகோணம் மாமன்றக் கூட்டத்தில் பெண் உறுப்பினா்கள் முற்றுகை

கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் கணவா்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டதால், (பொ) ஆணையரை பெண் உறுப்பினா்கள் முற்றுகையிட்டனா். மேயா் க. சரவணன் தலைமையிலும், ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் தகவல் பரப்பிய இளைஞா் கைது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடிக் கம்பம் உடைப்பு என சமூக வலைதளத்தில் தகவலை பரப்பிய இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். கும்பகோணத்தில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற வன்னியா் சங்க... மேலும் பார்க்க