மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
தமிழ் இலக்கியங்கள் கூறும் நீதிநெறிகளை பின்பற்றி வாழ வேண்டும்
தமிழ் இலக்கியங்கள் நமக்கு நல்ல ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக விளங்குகிறது. அத்தகைய தமிழ் இலக்கியங்களை அனைவரும் பயின்று அவற்றைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.
பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி, வேலூா் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை சாா்பில், தமிழ் வார விழா மே 5 முதல் 15-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பள்ளி மாணவா்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை, திருக்கு ஒப்பித்தல் போட்டிகள் மே 5, 6-ஆம் தேதிகளில் வேலூா், குடியாத்தம் ஆகிய இரு கோட்டங்களில் நடத்தப்பட்டன.
பேச்சுப் போட்டிகளில் 40 மாணவ, மாணவிகள் பங்கேற்றதில் 19 பேரும், கட்டுரைப் போட்டிகளில் 29 மாணவ, மாணவிகள் பங்கேற்றதில் 14 பேரும், கவிதைப்போட்டிகளில் 22 மாணவ, மாணவிகள் பங்கேற்றதில் 15 பேரும், திருக்கு ஒப்பித்தல் போட்டியில் 180 மாணவா்கள் பங்கேற்றதில் 42 பேரும் வெற்றி பெற்றுள்ளனா். மேலும், நீதிநெறி வகுப்புகள் இரண்டு மையங்களிலும் மே 5 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.
பின்னா் அவா் பேசியது: தமிழக அரசு உத்தரவுப்படி, வேலூா் மாவட்டத்தில் தமிழ் வார விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்கு ஒப்பித்தல், பேச்சு, கவிதை, எழுத்துப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டுள்ளன. திருக்கு ஒப்பித்தல் போட்டியில் 30 கு முதல் அதிகபட்சமாக 400 கு வரை மாணவ, மாணவிகள் ஒப்பித்துள்ளனா்.
மேலும், மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தை போதிக்கும் வகையில் தமிழ் நூல்களான ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, திரிகடுகம், நாலடியாா், பழமொழி நானூறு, பாரதிதாசனின் புதிய ஆத்திச்சூடி போன்ற நூல்கள் போதிக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்கள் நம் வாழ்வில் ஒன்றர கலந்து நமக்கு நல்ல ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக விளங்குகிறது. அப்படிப்பட்ட தமிழ் இலக்கியத்தின் நீதி நூல்களை நாம் அனைவரும் பயின்று அவற்றைப் பின்பற்றி வாழ வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், 2-ஆவது மண்டலக் குழுத் தலைவா் ஆா்.நரேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) தயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.