செய்திகள் :

`தற்போது தவெக; அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது..!' - செங்கோட்டையன் குறித்து நயினார்

post image

"ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்ற நோக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான கலாசாரம் மற்றும் ஆன்மிகப் பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக "காசி தமிழ் சங்கமம் 4.0" என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக, தெற்கே உள்ள காசியான தென்காசியில் இருந்து வடக்கே உள்ள காசி நோக்கி அகத்திய முனிவர் வாகன யாத்திரை இன்று தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது.

மத்திய அமைச்சர் காணொளி வாயிலாக தொடக்கம்:

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொளிக் காட்சி வாயிலாக இந்த வாகன யாத்திரையைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ZOHO நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அகத்தியர் வாகன தொடக்க விழா

தமிழ் கலாசாரத்தின் பெருமைகளைச் சுமந்து செல்லும் இந்த வாகன யாத்திரை தஞ்சாவூர், புதுச்சேரி, திருப்பதி, நந்தியால், ஹைதராபாத், நாக்பூர், ஜபல்பூர் மற்றும் பிரயாக்ராஜ் வழியாக வாரணாசியை அடையும் என்று கூறப்படுகிறது. இந்த வாகன யாத்திரை செல்லும் பல்வேறு மாநிலங்களில் சிறப்பு வரவேற்பும் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறுகையில், "நமது நாட்டின் பிரதமர் உலக நாடுகளுக்கு எங்குச் சென்றாலும் தமிழ் மொழி பற்றியும், அதன் கலாசாரத்தைப் பற்றியும் பெருமையாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாக, வாழும் பாண்டிய மன்னராக பாரத பிரதமர் செயல்பட்டு காசியில் தமிழ் சங்கம் மாநாட்டை நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

எஸ்.ஐ.ஆர் குறித்து:

குறிப்பாக, இறந்தவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் தி.மு.க போராடுகிறது. எஸ்.ஐ.ஆர்-இல் எந்த விதமான குளறுபடியும் இல்லை, குளறுபடியே தமிழக முதல்வர் மட்டும்தான்.

அகத்தியர் வாகனம்

அ.தி.மு.க - த.வெ.க குறித்து:

மேலும், 50 வருடகால அ.தி.மு.க ஆட்சியில் இருந்துவிட்டு, அப்போது நல்லாட்சி இல்லாதது போல தற்போது த.வெ.க-வின் மூலம் நல்லாட்சி கொடுப்பேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது வருத்தமாக உள்ளது. அ.தி.மு.க-வில் இருந்து தற்போது செங்கோட்டையன் த.வெ.கவிற்குச் சென்றுள்ள நிலையில், அங்கிருந்து எங்குச் செல்வார் என்று தெரியாது.

பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்கள் சக்தியோடு உள்ளதால், பொங்கலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையும். எந்தத் தனிநபரை வைத்தும் எந்தக் கட்சியும் இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள்கூட அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சக்தி கை ஓங்கி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

`சேராத இடம் சேர்ந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும்!' - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

மதுரை ஆதீனத்தை இன்று மதுரையில் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மடத்திற்கு வர வேண்டும் என மதுரை ஆதீனம் அழைப்பு விடுத்திருந்தார், மரியாதை நிமித்தமாக சந்தி... மேலும் பார்க்க

'தைலாபுரத்தில் ராமதாஸ் வேதனை; ஏற்காட்டில் அன்புமணி ரிலாக்ஸ்..' - பதற்றத்தில் தொண்டர்கள்

'இனி யாரும் எதுவும் செய்ய முடியாது!'பா.ம.க-வில் ராமதாஸ், அன்புமணியிடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்தது. கடந்த டிசம்பரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அது பகிரங்கமாக வெடித்தது. அந்தக் கூட்டத்தில் ரா... மேலும் பார்க்க

Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும்

இனி தயாரிக்கப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட் போன்களிலும் கட்டாயம் சஞ்சார் சாத்தி ஆப் இருக்க வேண்டும் என்றும்... ஏற்கெனவே உற்பத்தியான, விற்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில் சாப்ட்வேர் அப்டேட் மூலம் இந்த ஆப்பை இன்ஸ்டா... மேலும் பார்க்க

"அரசியல் புயல்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ள திமுக தயார்" - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாக்கிணறு தனியார் மண்டபத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல்... மேலும் பார்க்க

DMK : 'வார்த்தைக்கு வார்த்தை சாதிப் பெருமிதம்' - இதுதான் உங்க சமூக நீதியா துணை முதல்வரே?

ஈரோட்டின் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் கட்சியின் சார்பில் `வெல்லட்டும் சமூக நீதி' என ஒரு மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.30) நடத்தப்பட்டிருக்கிறது. மாநாட்டின் பெயர் வெல்லட்டும் சமூக நீதி, ஆனால்,... மேலும் பார்க்க

Target Gen Z: விஜய், சீமானுக்கு எதிரான தி.மு.க-வின் வியூகம் எடுபடுமா?

2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் வாக்குகளை டார்கெட் செய்து, அதற்கென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். சமீப காலமாக துணை முதல... மேலும் பார்க்க