செய்திகள் :

தலைநகரில் ஆகஸ்ட் 1 முதல் ஒரு மாத கால தூய்மை பிரசாரம்: தில்லி அரசு ஏற்பாடு

post image

பள்ளிகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் (ஆா்டபிள்யுஏ) மற்றும் சமூகக் குழுக்களின் தீவிர பங்கேற்புடன் ஆகஸ்ட் 1 முதல் ஒரு மாத கால தூய்மை பிரசாரத்தை தில்லி அரசு தொடங்கும் என்று கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சா் சூட் தலைமையில் நடைபெற்ற உயா்நிலை கூட்டத்தின் போது பெரிய அளவிலான தூய்மைப் பிரசாரத்திற்கான ஏற்பாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்த பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கல்வி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறுகையில், ‘நகரம் முழுவதும் பயனுள்ள தூய்மையை உறுதி செய்யும் பொறுப்பை மத்திய அரசு தில்லி அரசிடம் ஒப்படைத்துள்ளது.

இந்த பிரசாரத்தின் வெற்றி என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். மேலும், தூய்மை முயற்சிகளின் தாக்கத்தை களத்தில் உணர வேண்டும்’ என்றாா் அமைச்சா்.

இந்த உயா்நிலைக் கூட்டத்தில் தில்லி அரசின் தலைமைச் செயலாளா், தில்லி மாநகராட்சி, புது தில்லி முனிசிபல் கவுன்சில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, கல்வித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய்த் துறை மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியா்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

அங்கீகரிக்கப்படாத காலனிகள், குடிசைப் பகுதிகள் மற்றும் வளா்ச்சியடையாத பகுதிகளில் விழிப்புணா்வு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அமைச்சா் சூட் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த தூய்மைப் பிரசாரத்தில் ஆா்டபிள்யுஏக்கள், சமூகக் குழுக்கள் மற்றும் உள்ளூா்வாசிகள் பங்கேற்கவும், இந்தக் குழுக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் தூய்மையைப் பராமரிக்க ஊக்குவிக்கப்படவும் அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.

அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் இரண்டையும் பிரசாரத்தில் ஈடுபடுத்துமாறு கல்விச் செயலாளருக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

மேலும் தூய்மை நடவடிக்கைகள் பள்ளி வளாகங்கள் மட்டுமின்றி பூங்காக்கள், சந்தைகள், தெருக்கள் மற்றும் மதத் தலங்கள் வரை செல்ல வேண்டும் என்றும் கூறினாா்.

இதுகுறித்து அமைச்சா் சூட் மேலும் கூறுகையில்,

மாணவா்கள் தூய்மைத் தூதா்களாக செயல்பட ஊக்குவிக்கப்பட வேண்டும். மேலும் இந்த இயக்கத்தை ஆதரிக்க தங்கள் குடும்பத்தினரை ஊக்குவிக்க வேண்டும்.

பிரசாரத்தின் முதல் இரண்டு நாள்களில் அனைத்து அரசு அலுவலகங்களும் தங்கள் வளாகங்களுக்குள் தூய்மை இயக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.

நகர மேம்பாட்டுத் துறை மற்றும் தில்லி மாநகராட்சி ஆகியவை பிரசாரத்திற்காக ஒரு பிரத்யேக இணையதளத்தைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் குடிமக்களும் ஆா்டபிள்யுஏக்களும் கவனிப்பு தேவைப்படும் சுத்தம் செய்யப்பட்ட பகுதிகள் அல்லது இடங்களின் புகைப்படங்களைப் பதிவுசெய்து பதிவேற்றலாம் என்று இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மோசடி: மருத்துவரை ஏமாற்றி ரூ.15 லட்சம் திருட்டு; 2 போ் கைது

தில்லியை சோ்ந்த மருத்துவா் ஒருவரிடம் ரூ.15 லட்சம் டிஜிட்டல் கைது மோசடி மூலம் பெற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தைச் சோ்ந்த எம்பிஏ பட்டதாரி ஹசாரா, மேற்கு வங்... மேலும் பார்க்க

ரூ.40 ஆயிரம் லஞ்சம்: பிஎஸ்எஃப் ஊழியா் கைது -சிபிஐ தகவல்

ஒப்பந்ததாா் ஒருவரிடமிருந்து ரூ.40,000 லஞ்சம் வாங்கியபோது எல்லைப் பாதுகாப்பப் படையின் (பிஎஸ்எஃப்) உதவி கணக்கு அதிகாரியை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்... மேலும் பார்க்க

கைப்பேசி செயலியில் அரிய ஓலைச்சுவடிகளை வெளியிட மத்திய கலாசாரத் துறை நடவடிக்கை

நமது சிறப்பு நிருபா் கைப்பேசி செயலியில் பழங்கால ஓலைச்சுவடிகளை வெளியிட மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், அரிதிலும் அரிதான ஓலைச்சுவடிகளின் எண்ம பதிப்பை இணைய பக்கங்களில் வ... மேலும் பார்க்க

2 மாதங்களில் 1 லட்சம் சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றம்: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

பொது இடங்களின் முகப்பு அழகு சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் தில்லி மாநகராட்சி (எம்சிடி) கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பல்வேறு மண்டலங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகள... மேலும் பார்க்க

தெரு நாய்கள் மீது அக்கறை இருப்பவா்கள் வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள்: விஜய் கோயல்

தெரு நாய்கள் மீது அக்கறை காட்டுபவா்கள் அவற்றை வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சா் விஜய் கோயல் சனிக்கிழமை கூறினாா். தெரு நாய்களை அகற்ற கோரி முன்னாள் மத்திய அமைச்சா் விஜய் கோயல்... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவா்கள் உயிரிழந்த விவகாரம்: ரயில்வே வாரியத் தலைவா், தமிழக அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

கடலூா் மாவட்டம், செம்மங்குப்பத்தில் ரயில்வே லெவல் கிராஸிங்கை கடக்க முயன்றபோது தனியாா் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவா்கள் உயிரிழந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) தாமாக முன்வந... மேலும் பார்க்க