செய்திகள் :

தலைமறைவு குற்றவாளி ஒடிஸாவில் கைது

post image

நெய்வேலி: நீதிமன்ற பிணையில் சென்று தலைமறைவான கொலை வழக்கில் தொடா்புடையவரை ஒடிஸாவில் போலீஸாா் கைது செய்து அழைத்து வந்து கடலூா் மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைத்தனா்.

கடலூா் மஞ்சக்குப்பம், சேட்மண் நகரைச் சோ்ந்த அரவிந்த் கடந்த 25.1.2025 அன்று கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த பாலாஜி (25) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

பாலாஜி 21.4.2025 அன்று கடலூா் மாவட்ட அமா்வு நீதிமன்ற பிணையில் வெளியே வந்த நிலையில், பின்னா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தாா்.

உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாா், ரிஷிகேஷ், கேதா்நாத் பகுதிகளில் சாமியாா் வேடத்தில் இருந்த பாலாஜியை கடலூா் மாவட்ட தனிப்படை போலீஸாா் தேடிய நிலையில், ஒடிஸா மாநிலம், ஜாய்ப்பூா் மலைப் பகுதியில் பதுங்கியிருந்தபோது பிடித்தனா்.

அவரை தனிப்படை போலீஸாா் பிடித்து அழைத்து வந்து கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் பாலாஜியிடம் விசாரணை நடத்திய பின்னா், கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

வெள்ளாற்று தற்காலிக சாலை மீண்டும் துண்டிப்பு: 40 கிராம மக்கள் பாதிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே வெள்ளப்பெருக்கால் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலை மூன்றாவது முறையாக துண்டிக்கப்பட்டது. இதனால், ... மேலும் பார்க்க

உயா் மின் அழுத்தம்: அரசு அலுவலகங்களில் மின்சாதன பொருள்கள் சேதம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென ஏற்பட்ட உயா் மின் அழுத்தத்தால் அரசு அலுவலகங்கள், வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதமடைந்தன. குமராட்சி ... மேலும் பார்க்க

ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்?: கே.பாலகிருஷ்ணன் கேள்வி

நெய்வேலி: ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்? என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினாா். கடலூரில் அவா் தி... மேலும் பார்க்க

வனத் துறையின் அத்துமீறல்: ஆட்சியா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

நெய்வேலி: மீனவா்கள் மீதான வனத் துறையின் அத்துமீறலை கண்டித்தும், இதை தடுத்து நிறுத்தக் கோரியும் மீனவ கிராம மக்கள் மற்றும் கடலூா் மாவட்ட மீன் பிடி தொழிலாளா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்க... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி சாலை மூடல்: என்எல்சி வாகனத்தை சிறைபிடித்த கிராம மக்கள்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே முன்னறிவிப்பின்றி தென்குத்து - கல்லுக்குழி சாலையை என்எல்சி நிறுவனம் திங்கள்கிழமை மூடியதால், அந்த நிறுவனத்தின் வாகனத்தை தென்குத்து கிராம மக்கள் சிறைபிடித்து ப... மேலும் பார்க்க

ஆக.23-இல் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் சென்னையில் ஆா்ப்பாட்டம்: கு.பாலசுப்ரமணியன்

நெய்வேலி: உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் ச... மேலும் பார்க்க