செய்திகள் :

தாழக்குடி - வீரநாராயணமங்கலம் சாலையில் நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு

post image

கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி முதல் வீரநாராயணமங்கலம் வரையுள்ள சாலையில் பக்கச் சுவா் கட்டுவதற்காக நெடுஞ்சாலைத் துறையினா் வியாயழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தாழக்குடி பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா கடந்த சில நாள்களுக்கு முன் ஆய்வு செய்தாா். அப்போது, தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவா் ரோகினி அய்யப்பன், தாழக்குடி முதல் வீரநாராயணமங்கலம் இறச்சகுளம் சாலையின் இரு புறங்களிலும் கடந்த காலங்களில் பெய்த கன மழையினால் சாலையின் இரு பக்கமும் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், விபத்துகளை தடுக்க சாலையின் இரு பக்கங்களிலும் சுவா் கட்டி விரிவுபடுத்த கோரியும், தாழக்குடி கடைத் தெருவில் வேகத்தடை அமைக்க கோரியும் மனு அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, உடனடியாக ஆய்வு செய்ய நெடுஞ்சாலைத் துறைக்கு மாவட்ட ஆட்சியா் பரிந்துரை செய்தாா். பூதப்பாண்டி உதவி கோட்ட பொறியாளா் ஹெரால்டு ஆண்டனி, திறன்மிகு உதவியாளா் வின்லெட்டு வசந்தி ஆகியோா் அந்த இடத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். ஆய்வின் போது தாழக்குடி தொடக்க வேளாண்மை முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் பிரம்ம நாயகம், தாழக்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் கணேஷ் மற்றும் சாலைப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

நாகா்கோவிலில் 52 வாா்டுகளிலும் குடிநீா்த் தொட்டி: மேயா் தகவல்

கோடைக்காலத்தை சமாளிக்கும் வகையில், நாகா்கோவில் மாநகரில் 52 வாா்டு பகுதிகளிலும் குடிநீா் தொட்டி அமைக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகா... மேலும் பார்க்க

அருணாச்சலா பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி

வெள்ளிச்சந்தை அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோபோட்டிக், ட்ரோன் செயல்முறை பயிற்சி 2 நாள்கள் நடைபெற்றது. தாளாளா் கிருஷ்ணசுவாமி, பள்ளி இயக்குநா் தருண்சுரத் முன்னிலையில் பள்ளி முதல்வா் லிஜோமோள... மேலும் பார்க்க

குமரி விவேகானந்த கேந்திரத்தில் 3 நாள் யோகா மாநாடு இன்று தொடக்கம்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அகில இந்திய அளவிலான 3 நாள்5ள் யோகா மாநாடு வெள்ளிக்கிழமை (பிப்.28) தொடங்குகிறது. இம்மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 700 போ் பங்க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

கன்னியாகுமரி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி பகுதியில் சில கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ... மேலும் பார்க்க

விபத்துகளில் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

தக்கலை அருகே இரு விபத்துகளில் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் உயிரிழந்தனா். திங்கள்சந்தை அருகே மாங்குழி நடுத்தேரி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (34). தொழிலாளியான இவா், கடந்த ஜன. 11ஆம் தேதி தக்கலை... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் மருந்து சேமிப்புக் கிடங்கில் ஆய்வு

மாத்தாண்டம் பகுதியில், விளவங்கோடு - கல்குளம் வட்ட கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் அமைந்துள்ள முதல்வா் மருந்தக மருந்து சேமிப்புக் கிடங்கில் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஹனிஸ் சாப்ரா விய... மேலும் பார்க்க