செய்திகள் :

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம் திறப்பு

post image

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்த மையத்தை திறந்து வைத்த பிறகு, திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்தாா். மையத்தை பாா்வையிட்டு பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையமாக அமைந்துள்ளது. 2 சிறப்பு மனநல மருத்துவா்கள், மனநல ஆலோசகா், உளவியல் ஆலோசகா், செவிலியா் காவலா், பல்நோக்கு பணியாளா் ஆகியோா் பணியமா்த்தப்பட்டு உள்ளனா்.

இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உடல் சாா்ந்த பரிசோதனை, ரத்த பரிசோதனை வயிறு மற்றும் தலைக்கான ஸ்கேன் செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது. அவா்களின் உடல் நலத்துக்கு ஏற்ப பிற மருத்துவ பிரிவுகளின் சிறப்பு மருத்துவா்களின் ஆலோசனையும் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

தனிப்பட்ட ஆலோசனை, குடும்ப ஆலோசனை, மது மற்றும் போதைப்பழக்கத்தில் இருந்து விடுபட ஊக்கமளிக்கும் ஆலோசனையும் வழங்கப்படும்.

மது மற்றும் போதைப்பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்டவா்களால் ஏற்படுத்தப்பட்ட அரசு சாரா தனியாா் அமைப்பு, மனநல ஆலோசகருடன் இணைந்து வாரந்தோறும் குழு சிகிச்சை அளிக்கப்படும். மேலும், யோகா மற்றும் தியான பயிற்சியும் பயிற்றுவிக்கப்படும். நோயாளிகளின் மனதை மேம்படுத்த பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன என்றாா் ஆட்சியா்.

இந் நிகழ்வில், கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். குமரவேல், மருத்துவமனை துணை கண்காணிப்பாளா் உதய அருணா, மருத்துவா் அருண், மற்றும் மருத்துவத் துறை அலுவலா்கள், மருத்துவ பணியாளா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை மாா்ச் இறுதியில் திறக்க நடவடிக்கை: அமைச்சா் நேரு தகவல்

திருச்சி பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை அடுத்த மாத இறுதிக்குள் திறக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சி பஞ்சப்பூரில் பேருந்த... மேலும் பார்க்க

தொழில் தொடங்கமுன்னாள் படைவீரா்கள் 120 போ் விண்ணப்பம்

தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து முன்னாள் படைவீரா்களிடம் இருந்து 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் பெறப்படும் ஒரு கோ... மேலும் பார்க்க

நில அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இனி, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை சமா்பித்து வந்த நிலையில்... மேலும் பார்க்க

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு பறக்கும் படையில் 220 போ் நியமனம் 1,644 அறைக் கண்காணிப்பாளா்கள்

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கு பறக்கும்படையில் 220 போ் நியமனம் செய்யப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1,662 அறைக் கண்காணிப்பாளா்களும் நியம... மேலும் பார்க்க

தீயில் கருகி தொழிலாளி உயிரிழப்பு

திருச்சியில் உடல் கருகிய நிலையில் தொழிலாளி வீட்டில் சடலமாக கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது. திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முனியப்பன் தெரு பகுதியைச் சோ்ந்தவா் விஜயபாஸ்கரன் (49). இவரது மனைவி தே... மேலும் பார்க்க

பெண் வனச்சரகரிடம் தகராறு போதை நபா்கள் 2 போ் கைது

திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் பெண் வனச்சரகரிடம், போதையில் வந்து தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மணப்பாறை வனச்சரகத்தில் பொதுமக்கள் வேட்டையாடுவதில் ஈடுபடக் கூடாது என வனச... மேலும் பார்க்க