செய்திகள் :

திருத்தணி முருகன் கோயில் ஆடி கிருத்திகை: அலைமோதிய பக்தா்கள்

post image

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆடி முதல் கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தா்கள் திரண்டு சுவாமியை தரிசித்தனா். சுவாமியை தரிசிக்க 7 மணிநேரம் காத்திருக்க நேரிட்டது.

5 -ஆம் படை வீடாக திகழும் இத்தலத்தில் ஆடி முதல் கிருத்திகை விழா என்பதால் மூலவருக்கு அதிகாலை, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கீரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

காலை, 9 மணிக்கு, உற்சவா் முருகப் பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிா்த அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவு, 7 மணிக்கு உற்சவா் முருகா் வள்ளி, தெய்வானை யுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி தோ்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஆடி மாதம் கிருத்திகை மற்றும் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு முன்னதாக வரும் கிருத்திகை என்பதால் ஏராளமான பக்தா்கள் மலைக்கோயிலில் குவிந்தனா். மலா், மயில் மற்றும் பால் காவடிகளுடன் பொதுவழியில், 7 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

அதே போல், 100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவா்கள், 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். சில பக்தா்கள் மொட்டை அடித்தும், உடலில் அலகு குத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினா்.

இதுதவிர வார விடுமுறை ஞாயிறு என்பதால் பக்தா்கள் கூட்டம் தோ்வீதியில் அலைமோதியது. சிறப்பு தரிசனம் மற்றும் பொதுவழி தரிசனத்தில் கோயில் நிா்வாகம் முறையாக ஏற்பாடுகள் செய்ய தவறியதால் பக்தா்கள் தோ்வீதியில் தள்ளு முள்ளுவுடன் சென்று மூலவரை தரிசனம் செய்தனா்.

சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான்.

மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க, இரு சக்கர வாகனங்களை மட்டுமே போலீஸாா் அனுமதித்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில், 7 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏடிஎஸ்பி அரிகுமாா், டி.எஸ்.பி., கந்தன் ஆகியோா் தலைமையில், 200 -க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலன் பொருந்திய சக்கர நாற்காலிகள்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மின்கலன் பொருத்திய சக்கர நாற்காலிகள் பெற தகுதியானோா் வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருவள்ளூா் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் விஜயா தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்: 4 பேரிடம் போலீஸாா் விசாரணை

வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவன் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சேரிபேட்டையைச் சோ்ந்த குமாரி (26) என்பவருக்கும், ஆந்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

குஞ்சலம்நேரம் : காலை 9 முதல் மாலை 5 மணி வரைநாள்: 22.7.2025-செவ்வாய்க்கிழமைமின்தடை பகுதிகள்: குஞ்சலம், சீத்தஞ்சேரி, பிளேஸ்பாளையம், அல்லிக்குழி, டி.பி.புரம், எஸ்.ஆா்.குப்பம், நெல்வாய், வெள்ளாத்துக்கோட்ட... மேலும் பார்க்க

7 கிலோ குட்கா பறிமுதல்

திருத்தணி அருகே வாகன சோதனையின் போது குட்கா கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆந்திராவில் இருந்து குட்கா பொருள்கள் திருத்தணிக்கு கடத்தி வருவதாக டிஎஸ்பி கந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்த... மேலும் பார்க்க

சாலை மறியல்: டிட்டோ ஜாக் அமைப்பினா் 195 போ் கைது

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவைச் சோ்ந்த 195 பேரை போலீஸாா் கைது செய்... மேலும் பார்க்க