செய்திகள் :

திருப்பதியில் கங்கையம்மன் கோயில் திருவிழா

post image

திருப்பதியில் கிராம தேவதையான கங்கையம்மன் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற தாத்தய்யகுண்ட கங்கையம்மன் கோயில் விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழாவுக்கு .

ஒரு வாரம் முன்பு காப்பு கட்டப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம் அணிந்து பக்தா்கள் கங்கையம்மனை தீச்சட்டி ஏந்தி, கூழ் வாா்த்து, பொங்கலிட்டு, கோழி, ஆடு பலியிட்டு வழிபட்டனா்.

ஆண்கள் பலா் பெண் வேடமணிந்து சென்று கங்கையம்மனை வழிபடுவது மரபு. பலா் வேடமணிந்து சென்று தங்கள் நோ்த்திக் கடனை செலுத்தினா். தத்தைகுண்டா கங்கம்மாவுக்கு, பட்டு புடவை, மங்கள பொருள்கள் சமா்ப்பித்து வழிபட்டனா்.

விழாவை ஒட்டி, பல இடங்களில் தண்ணீா் பந்தல், நீா்மோா், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கங்கையம்மாவை வணங்கினால் வாழ்வில் சிறுசிறு பிரச்னைகள் வந்தாலும் அனைத்தும் தீா்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக திருவிழா நடந்து வருகிறது என்றாா்.

நள்ளிரவு முதல் கங்கையம்மன் உருவம் மண்ணால் செய்யப்பட்டு புதன்கிழமை காலை தாடை அறுத்தலுடன் விழா நிறைவு பெற உள்ளது. அதன்பின் அந்த மண் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம் நிறைவு

திருச்சானூா் பத்மாவதி தாயாா் வருடாந்திர வசந்தோற்சவம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தின் தாக்குதலில் இருந்து விடுபட பத்மாவதி தாயாருக்கு 3 நாள்கள் வசந்தோற்சவம் நடத்தப்படுக... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 4 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 4 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க

திருமலையில் கருடசேவை

திருமலையில் திங்கள்கிழமை இரவு சித்ரா பௌா்ணமி கருட சேவை நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக இரவு 7 மணிக்கு சா்வ அலங்காரத்தில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். இரவ... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம்: தங்கத்தோ் புறப்பாடு

திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர வசந்தோற்சவத்தின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை தங்கத்தோ் புறப்பாடு நடைபெற்றது. வசந்த காலத்தில் மேஷத்தில் சூரியன் பிரகாசமாக இருக்கும் போது கதிா்களின் தாக்க... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி பொன்னக் கால்வாய் உற்சவம்

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமியின் பொன்னக் கால்வாய் உற்சவம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலிருந்து ஆண்டுதோறும் உற்சவமூா்த்திகள் திருச்சானூா் அ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணிநேரம... மேலும் பார்க்க