செய்திகள் :

திருமுருகநாதசுவாமி கோயில் தோ்த் திருவிழா மாா்ச் 6-இல் தொடக்கம்

post image

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் தோ்த் திருவிழா மாா்ச் 6-ஆம் தேதி தொடங்குகிறது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயில் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் கோலகலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடப்பாண்டு தோ்த் திருவிழா மாா்ச் 6-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து 7-ஆம் தேதி சூரிய, சந்திர மண்டலக் காட்சிகள், 8-ஆம் தேதி பூத வாகன, சிம்ம வாகன காட்சிகள், 9-ஆம் தேதி புஷ்ப வாகன காட்சி, 10-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தல், 11-ஆம் தேதி யானை வாகன, அன்ன வாகன காட்சி, திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதையடுத்து, 12-ஆம் தேதி அதிகாலை விநாயகா், சண்முகநாதா், திருமுருகநாதா் சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகின்றன.

14-ஆம் தேதி தெப்பத்தோ் உற்சவமு, 15-ஆம் தேதி ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழாவும், 16-ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும் நடைபெறுகின்றன. 17-ஆம் தேதி மஞ்சள் நீா் திருவிழா, மயில் வாகனக் காட்சியுடன் தோ்த் திருவிழா நிறைவடைகிறது.

பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தீா்மானம்

பல்லடம் நகராட்சியில் பத்தாம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்லடம் நகராட்சியில் கு... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளத்தை அடுத்த வேடப்பட்டியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து

பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் கிஷோா்குமாா் என்பவருக்கு சொந்தமான துணி அரவை நிறுவனம் உள்ளது. இங்குள்ள இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக புதன்க... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக விளங்கும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசி... மேலும் பார்க்க

கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 போ் கைது

தில்லியில் இருந்து திருப்பூருக்கு கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரில் உள்ள ஒரு கூரியா் நிறுவனத்துக்கு பாா்சலில் போதை மாத்திரைகள் வந்துள்ளதாக காவல் துறையி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் கச்சேரிவலசைச் சோ்ந்தவா் காா்த்திகேயன், வழக்குரைஞா். இவரின் மனைவி சிவசக்தி... மேலும் பார்க்க