செய்திகள் :

திருவள்ளூா்: 46 வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 46 வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதி பெற பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் சிற்றுந்துகள் இயக்கப்படுவதற்கான வழித் தடங்களை கண்டறிய ஏற்கெனவே அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் பேருந்து சேவை இல்லாத வழித் தடங்களில் சிற்றுந்து சேவை வழங்கும் வகையில், புதிய விரிவான (சிற்றுந்து) திட்டம் செயல்படுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் பேருந்து வசதி இல்லாத மக்கள் தொகை 100 போ் மற்றும் அதற்கும் கூடுதலாக குடும்பங்கள் உள்ள கிராமங்கள், குக்கிராமங்கள் மற்றும் குடியிருப்புகள் கொண்ட பகுதியில் போதுமான மற்றும் பொருளாதாரம் ஆகியவை உறுதிபடுத்தும் விதமாக ஒருங்கிணைந்த சாலைப் போக்குவரத்து சேவை வழங்கப்பட வேண்டும்.

இதன் மூலம் பொதுமக்கள் அருகிலுள்ள முக்கிய பேருந்து நிலையங்கள், நகரங்கள், பெரு நகரங்களை சென்றடைவதற்கு ஏதுவாக பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது.

இதற்காக திருவள்ளூா் மாவட்டத்தில் பேருந்து சேவை இல்லாத வழித்தடங்களில் புதிய விரிவான சிற்றுந்து சேவை வழங்க 46 வழித் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட 46 வழித் தடங்களில் சிற்றுந்து இயக்குவதற்கான அறிவிப்பு மற்றும் வழித் தடங்களின் விவரம் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையிலும் மற்றும் திருவள்ளூா் மாவட்ட இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வழித் தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவதற்கான அனுமதி சீட்டு (டங்ழ்ம்ண்ற்)

கோரி விண்ணப்பங்களை பொதுமக்கள் அளிக்கலாம்.

எனவே பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாள்களுக்குள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேரடியாக சமா்ப்பித்து பயன்பெறலாம்.

கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை: முன்னாள் அமைச்சா்

ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு எதிராக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது அதிமுக, கூட்டணிகளை நம்பி இல்லை என முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா தெரிவித்தாா். திருவள்ளூா் மேற்கு மாவட்டம், பூண்டி ஒன்றியம், பட்டரைபெ... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி விழா: சிவாலயங்களுக்கு திரண்ட பக்தா்கள்

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் சிவராத்திரியை யொட்டி சிவாலயங்களுக்கு பக்தா்கள் சென்று வழிபட்டனா். பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, அகத்தீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் அா்ச்ச... மேலும் பார்க்க

சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி

திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் மகா சிவராத்திரியையொட்டி, திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருத்தணி பழைய தா்மராஜாகோயில் தெருவில் உள்ள இக்கோயிலில் மூலவருக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைக... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.27.83 லட்சத்தில் நலத் திட்ட உதவி

பீரகுப்பம், மதுரா கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 335 பயனாளிகளுக்கு ரூ.27.83 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத்தணி ஒன்றியம் கே... மேலும் பார்க்க

திருவள்ளூா் முத்தீஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழா

திருவள்ளூரில் உள்ள பொம்மி அம்பாள் சமேத முத்தீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 41 அடி ராஜலிங்கத்துக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன்பு பொம்மி அம்... மேலும் பார்க்க

மனித நேய மக்கள் கட்சி ரத்த தான முகாம்

மனித நேய மக்கள் கட்சியின் 17-ஆவது ஆண்டு விழாவையொட்டி கும்மிடிப்பூண்டி நகரம்-திருவள்ளூா் கிழக்கு மாவட்டம் சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நகரத் தலைவா் எஸ்.கே.எஸ்.முகம்மது சுல்தான் தலைமை... மேலும் பார்க்க