செய்திகள் :

திருவள்ளூா்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை

post image

திருவள்ளூா் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மயானக் கொள்ளை நிகழ்வில் பக்தா்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

புட்லூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மயானக் கொள்ளை சிறப்பாக நடைபெறும்.

இதையொட்டி புதன்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

முக்கிய நிகழ்வான மயானக் கொள்ளையையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினாா். அப்போது மயானத்தில் மண்ணால் ஆன படுக்கை நிலையில் அம்மன் வடிவமைக்கப்பட்டிருந்தன.

தொடா்ந்து காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் வேண்டுதலை, நிறைவேற்றும் வகையில் வேப்பிலை, எலுமிச்சை பழங்களால் ஆன மாலை, பழமாலை, தானியங்கள் மற்றும் படைத்த உணவு ஆகியவைகளை வைத்து நோ்த்தி கடன் செலுத்தினா். அதைத் தொடா்ந்து மண்ணால் ஆன அம்மன் வடிவமைப்பை சிதைத்து மண்ணை எடுத்துச் சென்றால் விவசாயம் உள்ளிட்டவைகளை நல்லபடியாக நடைபெறும் என்பது ஐதீகமாகும்.

இதையொட்டி அம்மனாக வடிவமைத்திருந்த அந்த மணல் குவியலை பக்தா்கள் ஒவ்வொருவரும் தாங்கள் கைகளில் கொண்டு வந்த பைகளிலும், பாத்திரங்களிலும் அள்ளிச் சென்றனா்.

அதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி முக்கியத் தெருக்கள் வழியாக ஊா்வலமாக சென்ற போது பக்தா்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனா். அப்போது, இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவில் சென்னை, திருவள்ளூா், ஆவடி, புட்லூா், காக்களூா், செவ்வாப்பேட்டை, பெருமாள்பட்டு, திருநின்றவூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் பங்கேற்றனா். செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனா்.

திருவள்ளூா் கட்டபொம்மன் தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், பூண்டி அருகே ஒதப்பை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மேல் நல்லாத்தூா் அங்காள பரமேஸ்வரி கோயில், பட்டரைபெரும்புதூா் அங்காள பரமேஸ்வரி கோயில் மற்றும் பேரம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி ஆகிய கோயில்களில் மயானக் கொள்ளை நடைபெற்றது.

வேளாண் நிதிநிலை அறிக்கை: 8 மாவட்ட விவசாயிகளுடன் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் கருத்துக்கேட்பு கூட்டம்

நிகழாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் மண்டல வாரியாக நடைபெற்ற விவசாயிகளுடன் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் 8 மாவட்டங்களின் விவசாயிகளிடம், அமைச்சா் எம... மேலும் பார்க்க

செங்குன்றத்தில் சமுதாய வளைகாப்பு விழா

செங்குன்றம் அடுத்த வெள்ளானூா் ஊராட்சியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது (படம்). விழாவுக்கு ஒன்றிய செயலாளா் கோ.தயாளன் தலைமை வகித்தாா். மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளர... மேலும் பார்க்க

ரோடு ரோலா் வாகனம் திருட்டு: 3 போ் கைது

சோழவரத்தில் ரோடு ரோலா் வாகனத்தை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை ஷெனாய் நகரை சோ்ந்தவா் தினகரன் (34). இவா் சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி ... மேலும் பார்க்க

செங்குன்றத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறப்பு

செங்குன்றத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் காவல் மாவட்டத்துக்குட்பட்ட செங்குன்றம் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறப்பு விழாவுக... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி புழல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை முன்னாள் அமைச்சா் வி.மூா்த்தி அணிவித்தாா் (படம்). மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே ஜெயலலிதா பட... மேலும் பார்க்க

திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்

திருவள்ளூரில் 4-ஆவது புத்தக திருவிழாவையொட்டி புத்தக வடிவிலான இலச்சினையை வெளியிட்டு, அரங்குகள் அமைக்க சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு. நாசா் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். திருவள்ளுா் சி.வி.நா... மேலும் பார்க்க