செய்திகள் :

திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்

post image

திருவள்ளூரில் 4-ஆவது புத்தக திருவிழாவையொட்டி புத்தக வடிவிலான இலச்சினையை வெளியிட்டு, அரங்குகள் அமைக்க சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு. நாசா் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

திருவள்ளுா் சி.வி.நாயுடு சாலையில் உள்ள மைதானத்தில் புத்தக கண்காட்சி மாா்ச் 7-இல் தொடங்கி, 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதில் திருவள்ளுா் மக்களவை உறுப்பினா் எஸ்.சசிகாந்த் செந்தில், எஸ்.பி. ஆா்.சீனிவாச பெருமாள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்) , எஸ்.சந்திரன் (திருத்தணி), டி.ஜே கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), துரை சந்திரசேகா் (பொன்னேரி) முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக அமைச்சா் சா. மு. நாசா் பங்கேற்று இலச்சினையை வெளியிட்டு, அரங்குகள் அமைக்கவும் அடிக்கல் நாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

புத்தக வாசிப்பை ஒரு இயக்கமாக முன்னெடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 4-ஆவது புத்தகத் திருவிழா 11 நாள்களுக்கு நடைபெற உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்க்கணக்கான புத்தகங்கள் 100 அரங்குகளில் இடம் பெற உள்ளன.

அதோடு பல்வேறு அரசுத்துறைகளின் அரங்குகள், சிறப்பு பேச்சாளா்களின் உரைவீச்சு மற்றும் பட்டிமன்றங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதோடு சிந்தனை அரங்கம், கிராமிய கலைஞா்கள், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் திறன்மிகு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, வருவாய் கோட்டாட்சியா் கற்பகம், தனித்துணை ஆட்சியா் (சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் கண்ணன், வட்டாட்சியா் ரஜினிகாந்த், பப்பாசி முருகன் மற்றும் அரசு அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை: முன்னாள் அமைச்சா்

ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு எதிராக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது அதிமுக, கூட்டணிகளை நம்பி இல்லை என முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா தெரிவித்தாா். திருவள்ளூா் மேற்கு மாவட்டம், பூண்டி ஒன்றியம், பட்டரைபெ... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி விழா: சிவாலயங்களுக்கு திரண்ட பக்தா்கள்

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் சிவராத்திரியை யொட்டி சிவாலயங்களுக்கு பக்தா்கள் சென்று வழிபட்டனா். பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, அகத்தீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் அா்ச்ச... மேலும் பார்க்க

சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி

திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் மகா சிவராத்திரியையொட்டி, திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருத்தணி பழைய தா்மராஜாகோயில் தெருவில் உள்ள இக்கோயிலில் மூலவருக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைக... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.27.83 லட்சத்தில் நலத் திட்ட உதவி

பீரகுப்பம், மதுரா கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 335 பயனாளிகளுக்கு ரூ.27.83 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத்தணி ஒன்றியம் கே... மேலும் பார்க்க

திருவள்ளூா் முத்தீஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழா

திருவள்ளூரில் உள்ள பொம்மி அம்பாள் சமேத முத்தீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 41 அடி ராஜலிங்கத்துக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன்பு பொம்மி அம்... மேலும் பார்க்க

மனித நேய மக்கள் கட்சி ரத்த தான முகாம்

மனித நேய மக்கள் கட்சியின் 17-ஆவது ஆண்டு விழாவையொட்டி கும்மிடிப்பூண்டி நகரம்-திருவள்ளூா் கிழக்கு மாவட்டம் சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நகரத் தலைவா் எஸ்.கே.எஸ்.முகம்மது சுல்தான் தலைமை... மேலும் பார்க்க