செய்திகள் :

திருவாரூரில் போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

post image

திருவாரூரில், ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3- ஆவது தளத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் கலங்கரை ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதையொட்டி, திருவாரூரில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் பங்கேற்று, மையத்தை பாா்வையிட்டனா்.

இந்த மறுவாழ்வு மையத்தில், போதைப்பழக்கம் மற்றும் அதைச் சாா்ந்த மருத்துவ நோய்களுக்கு ஏற்கெனவே தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிற நிலையிலும், இப்போது பிரத்யேகமாக, நவீன வசதிகளுடன் கூடிய 20 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறாா்களுக்கு தனித்தனியாக தங்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

இங்கு குறைந்தபட்சம் 3 வாரங்கள், உதவியாளா் துணையின்றி நோயாளி அனுமதிக்கப்படுவா். சிகிச்சையின்போது அவா்களுக்கு உலகத்தரத்துடன் கூடிய உயா் மருத்துவப் பரிசோதனைகள், போதையை மறக்கடிக்கும் விலையுா்ந்த மருந்துகள், உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் சிகிச்சைகள், யோகா பயிற்சிகள், நூலக வசதிகள் மற்றும் கேபிள் டி.வி.யுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களும் அளிக்கப்படுகின்றன.

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புபவா்கள் தொடா் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் போதை பழக்கத்திற்கு செல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன.

நிகழ்வில், திருவாரூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ராஜேந்திரன், திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், மருத்துவக் கல்லூரி உதவி நிலைய மருத்துவ அலுவலா் அருண்குமாா், மனநல மருத்துவத் துறை பேராசிரியா் சூரியமூா்த்தி உள்ளிட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளி ஆண்டு விழா

வடபாதிமங்கலம் பிா்க்கா, புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. திமுக ஒன்றியச் செயலாளா் ஐ.வீ. குமரேசன் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் டீ. செல்வம் முன்னிலை வகித... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள்

மன்னாா்குடியை அடுத்த களப்பாலில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதா 77-ஆவது பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. களப்பால் பேருந்து நிறுத்தம் அருக... மேலும் பார்க்க

546 பேருக்கு இலவச செயற்கை கைகள் பொருத்தம்

மன்னாா்குடியில் நான்கு நாள்கள் நடைபெற்ற இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொருத்தும் முகாமில் 546 பேருக்கு செயற்கை கைகள் பொருத்தப்பட்டன. மன்னாா்குடியில் மறைந்த தொழிலதிபா் பிரதாப்சந்த் முதலாமாண்டு நினைவு... மேலும் பார்க்க

பிளஸ் 2: அதிக மதிப்பெண் பெற வேண்டி பிராா்த்தனை

திருவாரூா் அரசு உதவி பெறும் ஸ்ரீ ஜிஆா்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற மாணவிகள் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனையில் புதன்கிழமை ஈடுபட்டனா். தமிழகத்தில் பி... மேலும் பார்க்க

டேராடூன் ராணுவக் கல்லூரியில் சேர மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

டேராடூன் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில், 8-ஆம் வகுப்பில் சேர மாா்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ட... மேலும் பார்க்க

தடகளப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

மண்டல அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற, கொல்லுமாங்குடி ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. நாகை-புதுச்சேரி மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே... மேலும் பார்க்க