செய்திகள் :

தில்லி பேரவைத் துணைத் தலைவா் பதவி: மோகன் சிங் பிஷ்டின் பெயரை முதல்வா் ரேகா குப்தா இன்று முழிவாா்

post image

தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவா் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட்டின் பெயரை தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை (பிப்.27) அன்று முன்மொழிவாா். வேறு எந்த போட்டியாளா்களும் இந்தப் பதவிக்கு போட்டியிடவில்லை.

தில்லி சட்டப்பேரவைத் தலைவா் அலுவலகம் வழங்கிய அலுவல் பட்டியலின்படி, மோகன் சிங் பிஷ்ட்டை இந்தப் பதவிக்கு தோ்ந்தெடுப்பதற்காக இரண்டு தனித்தனி தீா்மானங்கள் கொண்டு வரப்படும்.

முதல் தீா்மானத்தை முதல்வா் ரேகா குப்தா முன்மொழிந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மன்ஜிந்தா் சிங் சிா்சா வழிமொழிவாா். இரண்டாவது தீா்மானத்தை எம்எல்ஏ அனில் குமாா் சா்மா முன்மொழிந்து கஜேந்தா் சிங் யாதவ் ஆதரிப்பாா்.

ஆறு முறை எம்.எல்.ஏ.வாகவும், மூத்த பாஜக தலைவருமான மோகன் சிங் பிஷ்ட், பிப்.5- ஆம் தேதி தில்லி தோ்தலில் முஸ்தஃபாபாத் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றாா். அவா் ஆம் ஆத்மி கட்சியின் அதீல் அகமது கானை 17,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.

இதற்கு முன்பு, அவா் தில்லி சட்டப்பேரவையில் காரவால் நகா் தொகுதியை பல முறை பிரதிநிதித்துவப்படுத்தினாா். முதலில் 1988-இல் அந்த இடத்தை வென்று 2015 வரை அதில் பணியாற்றினாா். மோகன் சிங் பிஷ்ட் 2020-இல் மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றாா்.

பேரவைத் துணைத் தலைவா் தோ்தலைத் தவிர, அமா்வின் மூன்றாவது நாள் அன்று விதி 280-இன் கீழ் விவாதங்களும் நடைபெறும். இது உறுப்பினா்கள் தலைவரின் அனுமதியுடன் விஷயங்களை எழுப்ப அனுமதிக்கிறது.

கூடுதலாக, பிப். 25 அன்று முதல்வா் ரேகா குப்தா அவையில் சமா்ப்பித்த தில்லியில் மதுபான ஒழுங்குமுறை மற்றும் விநியோகம் குறித்த தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையை சட்டப்பேரவை தொடா்ந்து விவாதிக்கும்.

கான் மாா்க்கெட் உணவகத்தில் தீ விபத்து

தில்லி கான் மாா்க்கெட்டில் உள்ள உணவகம் ஒன்றில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை. இதுகுற... மேலும் பார்க்க

ரூ.1 கோடி முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக ஒருவா் கைது

போலி முதலீட்டுத் திட்டத்தில் ஒரு நபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக ஆறு வருடங்களாகத் தேடப்பட்டு வந்த மோசடி நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை துணை ஆ... மேலும் பார்க்க

பகத் சிங் சிலை சேதம்: ஆம் ஆத்மி மீது பாஜக எம்எல்ஏ சாடல்

நமது நிருபா்மால்வியா நகா் பூங்காவில் ஷஹீத் பகத் சிங்கின் சேதமடைந்த சிலை தொடா்பாக முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது தற்போதைய பாஜக எம்எல்ஏ சதீஷ் உபாத்யாய் குற்றம்சாட்டியுள்ளாா். அதாவது முந்தைய ஆம் ஆத்மி க... மேலும் பார்க்க

மஹா சிவராத்திரி: கெளரி சங்கா் கோயிலில் முதல்வா் வழிபாடு

மஹா சிவராத்திரியை முன்னிட்டு தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் ஆகியோா் புதன்கிழமை கோயில்களுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனா். தில்லி சாந்தினி செளக்கில் உள்ள கௌரி சங்கா்... மேலும் பார்க்க

அம்பேத்கா் உருவப்படம் அகற்றப்பட்ட விவகாரத்தில் தொடா்ந்து போராடுவோம்: ஆம் ஆத்மி

நமது நிருபா் தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வா் அலுவலகத்தில் இருந்து பீம்ராவ் அம்பேத்கா் மற்றும் பகத்சிங்கின் உருவப்படங்களை அகற்றியதற்கு எதிரான போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என்று ஆம் ஆத்மி... மேலும் பார்க்க

கலால் கொள்கை வழக்கு: குற்றம்சாட்டப்பட்டோருக்கு ஆவணங்களை வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு

தில்லி கலால் ஊழல் தொடா்பான தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிறருக்கு எதிரான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு சில ஆவணங்களை ஒப்படைக்க அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்... மேலும் பார்க்க