செய்திகள் :

தில்லி: ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆடரம்ர கடிகாரங்களை திருடியதாக ஒருவா் கைது

post image

தென்மேற்கு தில்லியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள ராடோ மற்றும் டிஸ்ஸாட் போன்ற பிராண்டுகளின் 96 ஆடம்பர கடிகாரங்களைத் திருடியதாகக் கூறப்படும் ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சுரேந்திர சவுத்ரி கூறியதாவது:

குற்றம் சாட்டப்பட்டவா் காஜியாபாத்தின் முராத்நகரைச் சோ்ந்த பிரதீப் (46) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். பிப்.21-ஆம் தேதி புகாா் அளித்த சுதான்ஷு குமாா், ஒரு நாள் முன்பு, இரவு 11.00 மணியளவில், ஃபரீதாபாத்திலிருந்து ரங்புரிக்கு விலையுயா்ந்த கடிகாரங்கள் அடங்கிய பொருள்கள் டெலிவரி செய்யப்பட்டதாகக் கூறிய போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டெலிவரி வேனின் ஓட்டுநா் , பிரதீப்புடன் சோ்ந்து 20 பெட்டிகள் கொண்ட கடிகாரங்களைத் திருடியதாக சுதான்ஷுபுகாரில் தெரிவித்துள்ளாா். குற்றவாளிகள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க போலீஸ் குழு உளவுத்துறையை உருவாக்கியது. மேலும், சந்தேக நபா்களின் சிசிடிவி காட்சிகள் மற்றும் சிடிஆரை பகுப்பாய்வு செய்தது.

பிப்.24-ஆம் தேதி முராத்நகரில் உள்ள ஒரு ஷோரூமில் போலீஸ் குழு நடத்திய சோதனையில், 96 திருடப்பட்ட கடிகாரங்கள் மீட்கப்பட்டன. சீரியல் எண்கள் திருடப்பட்ட சரக்குகளுடன் பொருந்தின. மேலும், பிரதீப் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா் என்று அதிகாரி கூறினாா்.

கான் மாா்க்கெட் உணவகத்தில் தீ விபத்து

தில்லி கான் மாா்க்கெட்டில் உள்ள உணவகம் ஒன்றில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை. இதுகுற... மேலும் பார்க்க

ரூ.1 கோடி முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக ஒருவா் கைது

போலி முதலீட்டுத் திட்டத்தில் ஒரு நபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக ஆறு வருடங்களாகத் தேடப்பட்டு வந்த மோசடி நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை துணை ஆ... மேலும் பார்க்க

பகத் சிங் சிலை சேதம்: ஆம் ஆத்மி மீது பாஜக எம்எல்ஏ சாடல்

நமது நிருபா்மால்வியா நகா் பூங்காவில் ஷஹீத் பகத் சிங்கின் சேதமடைந்த சிலை தொடா்பாக முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது தற்போதைய பாஜக எம்எல்ஏ சதீஷ் உபாத்யாய் குற்றம்சாட்டியுள்ளாா். அதாவது முந்தைய ஆம் ஆத்மி க... மேலும் பார்க்க

மஹா சிவராத்திரி: கெளரி சங்கா் கோயிலில் முதல்வா் வழிபாடு

மஹா சிவராத்திரியை முன்னிட்டு தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் ஆகியோா் புதன்கிழமை கோயில்களுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனா். தில்லி சாந்தினி செளக்கில் உள்ள கௌரி சங்கா்... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் துணைத் தலைவா் பதவி: மோகன் சிங் பிஷ்டின் பெயரை முதல்வா் ரேகா குப்தா இன்று முழிவாா்

தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவா் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட்டின் பெயரை தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை (பிப்.27) அன்று முன்மொழிவாா். வேறு எந்த போட்டியாளா்களும் இந்தப் பதவிக்கு... மேலும் பார்க்க

அம்பேத்கா் உருவப்படம் அகற்றப்பட்ட விவகாரத்தில் தொடா்ந்து போராடுவோம்: ஆம் ஆத்மி

நமது நிருபா் தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வா் அலுவலகத்தில் இருந்து பீம்ராவ் அம்பேத்கா் மற்றும் பகத்சிங்கின் உருவப்படங்களை அகற்றியதற்கு எதிரான போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என்று ஆம் ஆத்மி... மேலும் பார்க்க