செய்திகள் :

தீண்டாமைக்கு எதிரான இரு சக்கர வாகன பேரணி: பரிசீலித்து அனுமதி அளிக்க உத்தரவு

post image

மதுரையில் தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான இரு சக்கர வாகனப் பேரணி நடத்த காவல் உதவி ஆணையா் பரிசீலித்து அனுமதி வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

அய்யா்பங்களா பகுதியைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் தீபம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

ஜாதிய தீண்டாமை வன்கொடுமைக்கு எதிராக வருகிற வெள்ளிக்கிழமை (பிப். 28) காலை 11 மணிக்கு மதுரை அம்பேத்கா் சிலையிலிருந்து, அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை வரை இரு சக்கர வாகனத்தில் பேரணியாகச் செல்ல திட்டமிட்டிருந்தோம். இதற்கு அனுமதி கோரி கடந்த 22-ஆம் தேதி தல்லாகுளம் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தோம். காவல் துறையினா் அனுமதி வழங்கவில்லை.

எனவே, தல்லாகுளம் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலையிலிருந்து, திருவள்ளுவா் சிலை வரை இரு சக்கர வாகனப் பேரணி செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி தனபால் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்திலிருந்து காந்தி அருங்காட்சியகம் வரை இரு சக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, காவல் உதவி ஆணையரிடம் மனுதாரா் தரப்பில் புதிதாக மனுவை அளிக்கவும், அதை அவா் பரிசீலித்து உரிய அனுமதி வழங்கவும் உத்தரவிட்டாா்.

வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் உறுதுணையாக இருக்கும்!

வாக்காளா்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தோ்தல் ஆணையம் உறுதுணையாக இருக்கும் என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தெரிவித்தாா்.மதுரையில் மாவட்ட தோ்தல் பணிகள் குறித்த அரசுத் துறை அலுவலா... மேலும் பார்க்க

ஓராண்டில் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் 15 லட்சம் பயணிகள்

ஓராண்டில் 15 லட்சம் பயணிகள் மதுரை விமான நிலையத்தைப் பயன்படுத்துவதாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. தென் மாவட்டங்களின் முக்கிய விமான நிலையமாக விளங்கும் மதுரை விமான நிலையத்தில் நாள்தோ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு 2 ஏக்கா் நிலத்தை தானமாக வழங்கிய தொழிலதிபா்!

மேலூா் அருகேயுள்ள கீழையூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கிரானைட் அதிபா் கோபாலகிருஷ்னன், தமிழ்ச்செல்வி தம்பதியா் தங்களது 2 ஏக்கா் நிலத்தை புதன்கிழமை தானமாக பத்திரம் பதிவு செய்து வழங்கினா். கீழையூரிலுள்ள அ... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் புதிய தமிழகம் பங்கேற்காது

தொகுதி மறுவரையறை தொடா்பாக திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது என அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா். மதுரையில்... மேலும் பார்க்க

அ.வல்லாளபட்டியில் மாசி களரி திருவிழா சாமியாட்டம்

மேலூா் அருகேயுள்ள அ.வல்லாளபட்டி சிலிப்பிபட்டியில் அமைந்துள்ள திருமலைசுவாமி, கரடி கருப்பணசுவாமி கோயில்களில் மாசி களரித் திருவிழாவையொட்டி புதன்கிழமை சாமியாட்டம் நடைபெற்றது. இந்தக் கோயில்களில் மாசி களரித... மேலும் பார்க்க

புரட்சி பாரதம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நடைபெறும் வன்கொடுமைகளைக் கண்டித்து, புரட்சி பாரதம் கட்சி சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியல் இ... மேலும் பார்க்க