செய்திகள் :

துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 10,000 போனஸ்: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

post image

மகா கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு போனஸ் அளிக்கவிருப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் வெகு விமரிசையாக நடைபெற்ற மகா கும்பமேளா புதன்கிழமையுடன் முடிவுயுற்றதையடுத்து, பிரயாக்ராஜ் மக்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, ``பிரயாக்ராஜ் மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். கடந்த 2 மாதங்களாக, மகா கும்ப நிகழ்வை, தங்கள் வீட்டு விழாவாக பிரயாக்ராஜ் மக்கள் கருதினர். இந்த நகரத்தில் 20 முதல் 25 லட்சம் மக்கள் உள்ளனர். இந்த நிலையில், 5 முதல் 8 கோடி பேர் ஒரே நேரத்தில் வரும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இவ்வளவு பெரிய கூட்டம் உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை.

மகா கும்பத்தில் மொத்தம் 66.30 கோடி பக்தர்கள் பங்கேற்றனர், ஆனாலும் கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்கள் எதுவும் மகா கும்பத்தில் நடக்கவில்லை. நுண்ணோக்கியை வைத்துக்கூட, எதிர்க்கட்சியால் மகா கும்பத்தில் குற்ற வழக்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அளவிலான ஒரு வரலாற்று நிகழ்வு அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க:நாளை விசாரணைக்கு ஆஜராக முடியாது; என்ன செய்ய முடியும்? - சீமான் பேட்டி

மௌனி அமாவாசையில் மட்டும் 8 கோடி பக்தர்கள் கூடியிருந்தனர். மகா கும்ப விழாவில் பணியாற்றிய துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ. 10,000 போனஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஏப்ரல் முதல் துப்புரவுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 16,000 வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரின் சுகாதாரப் பாதுகாப்புக்காக ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுடன் அவர்கள் இணைக்கப்படுவார்கள். இதன்மூலம், அவர்களுடைய சிறந்த நலன் மற்றும் ஆதரவை உறுதி செய்யப்படும். அனைத்து ஊழியர்களும் ஆயுஷ்மான் யோஜனாவுடன் இணைப்பதன் மூலம் ஜன் ஆரோக்யா பீமாவின் பலன்களைப் பெறுவார்கள்’’ என்று தெரிவித்தார்.

பௌஷ பொ்ணமியை முன்னிட்டு கடந்த ஜன. 13 தொடங்கி, 45 நாள்களுக்கு நடைபெற்ற இந்த மகத்தான விழாவில் 66 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடி வழிபட்டனா்.

பிரயாக்ராஜ் நகரில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா நடத்தப்பட்டது. எனினும், தற்போதைய வானியல் நிலைகள் காரணமாக 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற நடப்பு கும்பமேளா கூடுதல் சிறப்பு வாய்ந்தது. தொடக்க நாள்களில் பிரயாக்ராஜில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தினசரி கோடிக்கணக்கான பக்தா்கள் நீராடினா்.

பிரதமரின் திட்டத்தால் ஏழைகளின் பைகள் காலியாகிறது: கார்கே

விக்ஸித் பாரத் திட்டத்தால் இந்திய ஏழைகள் பணமின்றி தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.காங்கிரஸ் மூத்தத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, தனது எக்ஸ் பக்கப் பதிவில் கூறியதாவது ``பிரத... மேலும் பார்க்க

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள் என்றும் அவர்கள் மீது அனுதாபம் காட்டக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் பேசியது சர்ச்சையாகியுள்ளது. ஹரியானா முன்னாள் முதல்... மேலும் பார்க்க

கும்பமேளாவை பயன்படுத்திக்கொண்ட நிறுவனங்கள்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை 45 நாள்கள... மேலும் பார்க்க

இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு 50 ஆண்டுகால வரலாறு காணாத வீழ்ச்சியடைந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்தியாவின் 140 கோடி மக்கள்தொகையில் சுமார் 100 கோடி பேர், அத்தியாவசிய செலவுகளைத் தவிர மற்றவைக்... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைக் கண்டுபிடிப்பவருக்கு 1 லட்சம்!

பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, குற்றவாளியின் புகைப்படம் வெளியான நிலையில், அந்நபர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று புணே காவல் துறை தெ... மேலும் பார்க்க

தில்லி பேரவையின் துணைத் தலைவராக மோகன் சிங் தேர்வு!

தில்லி சட்டப் பேரவையின் துணை தலைவராக பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் ரேகா குப்தா கொண்டுவந்த தீர்மானத்தைச் சுற்றுச்சுழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வழிமொழிந்தார், அ... மேலும் பார்க்க