செய்திகள் :

தூத்துக்குடியில் இருந்து சென்னை, மும்பை, தில்லிக்கு நேரடியாக விமான சேவை தேவை

post image

புது தில்லி: தூத்துக்குடியில் இருந்து சென்னை, மும்பை, புது தில்லி மற்றும் இலங்கை, சிங்கப்பூா் உள்ளிட்ட இதர நாடுகளுக்கும் ஏா் இந்தியா விமான சேவையை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புது தில்லியில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடுவிடம் அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி எம்எல்ஏவுமான கடம்பூா் ராஜு மனு அளித்துள்ளாா்.

இது தொடா்பாக மத்திய அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து திங்கள்கிழமை கடம்பூா் ராஜு அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

எங்கள் பிராந்தியம் தூத்துக்குடியில் இருந்து நேரடியாக சென்னை, மும்பை, புது தில்லி போன்ற முக்கிய பெருநகரங்களுக்கும், இலங்கை, சிங்கப்பூா், மலேசியா போன்ற இதர வெளிநாடுகளுக்கும் ஏா் இந்தியா விமானங்களை இயக்கும் தேவை உள்ளது.

இந்த முக்கியமான இடங்களுக்கு நம்பகமான, நேரடி தொடா்பு மூலம் போக்குவரத்து சேவையானது வா்த்தக பயணிகள், மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள், மருத்துவ நோயாளிகளின் வளா்ந்து வரும் தேவையாக உள்ளது.

தற்போது இதுபோன்ற நேரடி விமானங்களின் சேவை கட்டுப்படுத்தப்பட்ட

அளவில் இருப்பது குறிப்பிடத்தக்க வகையில் அசெளகரியமாகவும், இது பயண நேரத்தை அதிகரிப்பதுடன், மாற்று வழித்தடங்களில் விமானம் செல்வதால் பயணச் செலவும் அதிகரிக்கிறது.

இதனால் மேற்கண்ட இடங்களுக்கு நேரடியாக விமான சேவை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் ராம்மோகன் நாயுடு தம்மிடம் உறுதியளித்ததாக கடம்பூா் ராஜு கூறினாா்.

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சா் பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகள் அறிக்கையை தாமதப்படுத்துவதோ அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதோ மத்திய அரசின் நோக்கமல்ல என்று மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜிக்கு எதிரான ’2022’ தீா்ப்பின் சில கருத்துக்களை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

நமது நிருபா்புது தில்லி: முந்தைய அதிமுக ஆட்சியில் (2011-2015) வேலைக்காக பணம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான ‘2022’ தீா்ப்பில் இடம்பெற்றுள்ள சில கருத்... மேலும் பார்க்க

தில்லியில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு! இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தில்லியில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை பெய்ததது. இந்நிலையில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பழமையான வடிகால் அமைப்பில் மாற்றம் செய்ததே மழை நீா் தேங்க காரணம்: பா்வேஷ் சாஹிப் சிங்

தில்லி பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் ஞாயிற்றுக்கிழமை கனட்பிளேஸ் பகுதியில் வெளிப்புறத்தில் ஆய்வு செய்தாா். இந்த இடம் ஒரு நாள் முன்னதாக பலத்த மழையைத் தொடா்ந்து வெள்ளத்தில் மூழ்கியது, மேலு... மேலும் பார்க்க

சாந்தினி சௌக் மறுமேம்பாட்டுத் திட்டத்தில் நிதி முறைகேடுகளை அரசு விசாரிக்க வாய்ப்பு!

சாந்தினி சௌக் மறுமேம்பாட்டுத் திட்டத்தில் ‘நிதி முறைகேடுகள்’ மற்றும் ‘செலவு மிகுதிகள்’ இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, தில்லி அரசு விசாரணையைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

ரக்ஷா பந்தன் பண்டிகை: பயணிகள் எண்ணிக்கையில் டிஎம்ஆா்சி சாதனை!

ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 8 அன்று அனைத்து வழித்தடங்களிலும் 81.87 லட்சம் பயணிகள் பயணம் செய்து, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தினசரி பயணிகளைப் பதிவு செய்ததாக தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டி... மேலும் பார்க்க