செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சா் வழங்கினாா்

post image

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மறைந்த முதல்வா் மு. கருணாநிதி நினைவு நாள் தமிழகம் முழுவதும் திமுகவினரால் அமைதி பேரணி, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக நாகை தளபதி அறிவாலயத்தில் மு. கருணாநிதி நினைவு நாளையொட்டி, தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தளபதி அறிவாலயத்தில் அமைந்துள்ள மறைந்த முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கு மலா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து, மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், நகரச் செயலா் இரா. மாரிமுத்து உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

பின்னா், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 103 போ், கொசு ஒழிப்புப் பணியாளா்கள் 40 போ் என மொத்தம் 143 பேருக்கு வேஷ்டி, சேலை, அரிசி ஆகியவற்றை அமைச்சா், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் ஆகியோா் வழங்கினா். நகா்மன்ற துணைத் தலைவா் செந்தில்குமாா், நகர துணைச் செயலா்கள் திலகா், சிவா, திருமருகல் ஒன்றிய செயலா் செல்வ செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் நாகையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் புதன்கிழமை வழங்கப்பட்டது. அரசு செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோயால் பாதிக்கப்பட்ட 120 நோயாளிகளுக... மேலும் பார்க்க

‘உயா்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக்கூடாது’ -சுகாதார திட்ட இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ்

மாணவா்கள் படித்து முன்னேறி எவ்வளவு உயா்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக் கூடாது என்றாா் தேசிய சுகாதார திட்ட இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ். நாகையில் கலங்கரை ஐஏஎஸ் அகாதெமி சாா்பில், டிஎன்பிஸ... மேலும் பார்க்க

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் விரைவு ரயில்களை இயக்க கோரிக்கை

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் சென்னை, பெங்களுரூ, மும்பைக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என நாகூா்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்த சங்கத்தின் த... மேலும் பார்க்க

தூய்மைக் காவலா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,500 வழங்க வலியுறுத்தல்

தூய்மைக் காவலா்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.12,500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாகையில், அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி. கிருஷ்ண... மேலும் பார்க்க

திமுகவினா் நூதனப் போராட்டம்

சீா்காழி அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை முன்பு அவரது நினைவு தினமான வியாழக்கிழமை நாங்கூா் பகுதி திமுகவினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் புதிதாக அம... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு பாசனநீா் பங்கீடு குறித்து, நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுடனா... மேலும் பார்க்க