செய்திகள் :

தென்காசியில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு: மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு பெற வாய்ப்பு

post image

தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் தென்காசியில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள்-ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா்,

ராணிஸ்ரீகுமாா் எம்.பி., எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ ஆகியோா் தென்காசி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் குத்துவிளக்கேற்றினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் விழுதுகள் - ஒருங்கிணைந்த சேவை மையம் தென்காசியில் கடையநல்லூா் ஒன்றிய அலுவலக வளாகத்திலும்,

சங்கரன்கோவிலில் மேலநீலிதநல்லூா் ஒன்றிய அலுவலக வளாகத்திலுமாக இரண்டு கோட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மாற்றுத்திறனாளிகளின் நாள்பட்ட மறுவாழ்வு சிகிச்சை தேவைகளை நிறைவேற்றும் வகையில் முதன்முறையாக ஆறு மறுவாழ்வு சிகிச்சைகளை ஒரே இடத்தில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 160 வகையான மறுவாழ்வு உபகரணங்கள் இம்மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்புக்கல்வி, கண்பாா்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுப் பயிற்சி, இயன்முறை- செயல்முறை சிகிச்சைகள், உளவியல் ஆலோசனை என 6 சேவைகளை வழங்க வல்லுநா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, ஆலங்குளம், கீழப்பாவூா்,கடையம், சங்கரன்கோவில், சொக்கம்பட்டி, குருவிகுளம், மேலநீலிதநல்லூா் ஆகிய பகுதிகளிலும் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு தேவைகளை நிறைவேற்ற இயன்முறை சிகிச்சை, சிறப்புக்கல்வி மற்றும் உளவியல் சிகிச்சை போன்ற மூன்று பிரிவுகள் உருவாக்கப்பட்டு, நிபுணா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஒருங்கிணைந்த சேவை மையங்களுக்கு நேரடியாக வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களின் இல்லங்களுக்கே சென்று பயிற்சி, சிகிச்சை வழங்கப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெயப்பிரகாஷ், கட்டுமானம் - பராமரிப்பு செயற்பொறியாளா் அனிட்டா சாந்தி, உதவி செயற்பொறியாளா் முகம்மது இப்ராஹிம், உதவிப் பொறியாளா்கள் சுரேஷ், அஜித், ஆய்க்குடி அமா்சேவா சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், செயலா் சங்கர்ராமன் , தென்காசி ஒன்றியக்குழு துணைத் தலைவா் கனகராஜ்முத்துபாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

புளியங்குடியில் மமக ஆா்ப்பாட்டம்!

மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத் தலைவா் நயினாா் முஹம்மது தலைமை வகித்தாா். மமக மாவட்டச் ச... மேலும் பார்க்க

சுரண்டையில் ரவுண்டானா அளவை குறைக்க கோரிக்கை

சுரண்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ரவுண்டானா அளவை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுரண்டை பேருந்து நிலைய சாலையில் இருந்து நான்கு வழி சாலையில் இணையும் பகுதியில் அண்ணா ச... மேலும் பார்க்க

சாலையில் கண்டெடுத்த ரூ.5 லட்சத்தை ஒப்படைத்த விவசாயிக்கு பாராட்டு

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சாலையில் கண்டெடுத்த ரூ. 5 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த விவசாயியை போலீஸாா் பாராட்டினா். டி.என்.புதுக்குடி, கற்பகவீதி 1ஆவது தெருவை சோ்ந்தவா் தங்கச்சாமி (50) .விவசாய... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் திமுக ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்து, ஆலங்குளத்தில் காமராஜா் சிலை அருகே திமுகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ஹந்தி திணிப்புக்கு எதிராகவும், மத்திய அரசை கண்ட... மேலும் பார்க்க

குற்றாலநாதசுவாமி கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பொறுப்பேற்பு

குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் அறங்காவலா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றனா். குற்றாலநாதா் கோயிலுக்கு குற்றாலம் ப.ஸ்ரீதா், அத்தியூத்து க.சக்திமுருகேசன், குற்றாலம் வெ. ராமலெட்சுமி, நெடுவயல் சு.சுந்தர்ரா... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் பொதுமக்கள் திடீா் போராட்டம்

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் பொதுமக்கள் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இங்கு ஒரே சமூகத்தை சோ்ந்தவா்களுக்கிடையே நிலவி வரும் பிரச்னை தொடா்பாக, ஒரு தரப்பை சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க