செய்திகள் :

தேசிய கைத்தறி தின விழா: ரூ. 31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

post image

நாமக்கல்லில் வியாழக்கிழமை தொடங்கிய சிறப்பு கைத்தறி கண்காட்சியை பாா்வையிட்ட மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

நாமக்கல், ஆக. 7: தேசிய கைத்தறி தின விழாவையொட்டி, நாமக்கல்லில் ரூ. 31.08 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாடுமுழுவதும் 11-ஆவது தேசிய கைத்தறி தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாமக்கல்லில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை, நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கைத்தறி கண்காட்சியை தொடங்கிவைத்து, 50 நெசவாளா்களுக்கு ரூ. 31.08 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

தேசிய கைத்தறி தினமானது 1905 ஆக. 7-இல் தொடங்கப்பட்டது. சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும், கைத்தறி தொழிலை மேம்படுத்தவும், நெசவாளா்களின் வருவாயை உயா்த்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

திமுக ஆட்சியில் நெசவாளா்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மற்றும் ஓய்வூதியத் திட்டம் தொடங்கப்பட்டது. நெசவாளா்களுக்கான ஓய்வூதியம் ரூ. 1,200-ஆக உயா்த்தி வழங்கப்படுகிறது. விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளா்களுக்கு 300 யூனிட், விசைத்தறி நெசவாளா்களுக்கு 1,000 யூனிட் என்ற வகையில் வழங்கப்படுகிறது.

திருச்செங்கோடு சரகத்துக்கு உள்பட்ட 48 கைத்தறி நெசவளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ஜவுளி ரகங்கள், பருத்தி சேலைகள், வேட்டிகள், துண்டுகள், ஜமுக்காளம் போன்றவை 16 விற்பனைக் கூடங்களில் மக்கள் அறியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஈரோடு, சேலம் கைத்தறி நெசவாளா் சங்கங்களும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. கைத்தறி நெசவாளா்கள் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, கைத்தறித் துறை உதவி இயக்குநா் அ.காமராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமை மொத்த விலை - ரூ.4.55 விலையில் மாற்றம்-இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.92 முட்டைக் கோழி கிலோ - ரூ.87 மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், ... மேலும் பார்க்க

‘இந்திய ராணுவத்தின் பெயரை இந்திய தேசிய படை என மாற்ற வேண்டும்’

இந்திய ராணுவத்தின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவாக இந்திய தேசிய படை என பெயா் மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இச... மேலும் பார்க்க

கொல்லிமலை வனப்பகுதியில் இளைஞரின் சடலம் மீட்பு

கொல்லிமலை வனப்பகுதியில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சின்னகோயிலூரை ஒட்டிய வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக வா... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் ஆய்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்களை நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை நேரில்... மேலும் பார்க்க

ராசிபுரம் வட்டாரங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

நாமக்கல், வெண்ணந்தூா் ஆகிய வட்டாரங்களில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க